India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது <
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் புனிதத்தைப் பேணும் வகையில், செருப்பு மற்றும் ஷூ அணிந்து மலை ஏறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியைத் தூய்மையாகப் பராமரிக்க ஒத்துழைக்குமாறு வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை வடக்கு தொகுதி பூசாரிபாளையத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகி எம்.எல்.ஏ அம்மன் K.அர்ச்சுணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், பகுதி செயலாளர் நடராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இணையும் நிர்வாகிகளுக்குச் சால்வை அணிவித்து அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

சூலூர் நடுப்பாளையத்தில் ஆரோக்கியதாஸின் ஒன்றரை வயது மகள் ஜோஸ்லின், பெரியப்பா ஆண்ட்ரூஸ் காரை பின்புறமாக இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோதி பலியானார். குழந்தை பின்னால் இருப்பதை அறியாமல் காரை எடுத்ததால் இந்தச் சோகம் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 365 பள்ளிகளைச் சேர்ந்த 35,712 மாணவ, மாணவிகள் நாளை (மார்ச் 2) முதல் 26-ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தவிர்க்க 300 பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் 130 துறை கண்காணிப்பாளர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தை நரேந்திர மோடி மதுரையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவிடம், பாலக்காடு–சென்னை ரயிலுக்கு “மாசாணியம்மன் எக்ஸ்பிரஸ்” என பெயரிட கோரி, ஆனைமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கோவை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0422-2220351 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.