Coimbatore

News April 27, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கோவையில் நேற்று (ஏப்.26) 102.56 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கோவை மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கோவை மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

கோவை மாணவி, அமெரிக்காவில் கைது

image

பாலஸ்தீனத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உடனே நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில், காசா போரை நிறுத்த வேண்டும் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். இதில் அமெரிக்காவில் படித்து வரும் கோவை மாணவி அச்சிந்தியாவை அமேரிக்கா போலீசார் கைது செய்தனர்.

News April 27, 2024

கோவை மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க 

image

கோவை மாவட்டம் ஊஞ்சபாளையம் விநாயகர் கோவில் எதிரில் இன்று (ஏப்ரல். 27)ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் முகவரி திருத்தம், மொபைல் நம்பர் இணைத்தல், பின்கோடு எண் மாற்றுதல், புதிதாக ஆதார் எடுத்தல், உள்ளிட்ட சேவைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 27, 2024

கோவை மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க 

image

கோவை மாவட்டம் ஊஞ்சபாளையம் விநாயகர் கோவில் எதிரில் இன்று (ஏப்ரல். 27)ஆதார் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் முகவரி திருத்தம், மொபைல் நம்பர் இணைத்தல், பின்கோடு எண் மாற்றுதல், புதிதாக ஆதார் எடுத்தல், உள்ளிட்ட சேவைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 27, 2024

கோவையில் 15 நாட்கள்.. கலெக்டர் அறிவிப்பு 

image

கோவை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். அதில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து விளையாட்டு போட்டிகளை 29.04.2024 முதல் 13.05.2024 வரை நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கு கலந்து கொள்ளலாம்.

News April 26, 2024

கோவை வெப்பநிலை விவரம்

image

கோவையில் நேற்று (ஏப்.25) 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

கோவை நேற்றைய வெப்பநிலை விவரம்

image

கோவையில் நேற்று (ஏப்.25) 103 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை, 39° – 42° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 26, 2024

வீடு தீப்பிடித்து பொருட்கள் எரிந்து நாசம்

image

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சோ்ந்தவா் உமா மகேஸ்வரி (45). இவரது வீட்டிலிருந்து நேற்று புகை வெளிவந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தேனிக்கு சென்ற உமா மகேஸ்வரிக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 26, 2024

கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு

image

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 2019ல் கோவை மகளிர் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை முடிவுற்று வரும் ஜூனில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 26, 2024

மேட்டுப்பாளையம்: போக்சோ சட்டத்தில் இருவர் கைது

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன் மற்றும் கூலி தொழிலாளி லோகேஷ் உள்ளிட்ட இருவரும் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால் சிறுமி ஐந்து மாத கர்ப்பமானார். சிகிச்சைக்காக நேற்று மேட்டுப்பாளையம் ஜிஎச் சென்றபோது இதுகுறித்து தெரியவந்தது. மேட்டுப்பாளையம் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!