India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ஆம் தேதி நடக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் டிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று (21.01.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
5 மணி நேரத்தில் பெண் போலீஸ் உட்பட குறைந்தது 10 பேரிடம் 2 முகமூடி கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஓட்டேரி, பீர்க்கன்கரணை, மணிமங்கலம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த செயின் பறிப்பு நடந்துள்ளன. அதன் மதிப்பு 20 சவரன் ஆகும். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று (ஜன.21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு, ஜி.ஏ. ரோடு, டி.எச்.ரோடு, சோலையப்பன் தெரு, தாண்டவராயன் தெரு, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை, பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி குடியிருப்புகள், வேளச்சேரி குடியிருப்புகள் பிரதான சாலை, கே.கே.நகர், கன்னிகாபுரம், விஜயராகவபுரம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சமூக பணி, சமூகவியல், குழந்தைகள் மேம்பாடு, மனித உரிமைகள், பொது நிர்வாக உள்ளிட்டவற்றில் முதல் நிலை பட்டம் பெற்று 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு https://chennai.nic.in என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைக்க உள்ளதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “காணும் பொங்கலன்று மெரினா கடற்கரையில் கூடும் லட்சக்கணக்கான மக்களால், கடற்கரை குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. எனவே அன்றைய தினம் அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம்” என குறிப்பிட்டுள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.1,000 பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை, 50% மாணவர் சலுகை அட்டைகளின் விற்பனை காலம் வரும் ஜன. 24ஆம் தேதி வரை மாநகர போக்குவரத்துக் கழகம் நீடித்துள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை அடுத்து பயணிகளின் நலன்கருதி இம்மாதம் மட்டும் நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கோமியம் பருகுவது நல்லது என சென்னை IIT இயக்குனர் காமகோடி பேசியதற்கு, பிற்போக்குத்தனமான கருத்துகளை அவர் பேசிவருவதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கோமியத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. நாங்கள் பஞ்சகாவியம் சாப்பிடுவது வழக்கம். இது தொடர்பாக பேசுவதை தாம் நேர்மறையாக பார்ப்பதாக IIT இயக்குநர் காமகோடி கூறியுள்ளார்.
சென்னையில் பெற்றோரே 10ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் தொழிலில் தள்ளி, அதை காணொளியாக எடுத்து, இணையதளத்தில் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் ஆறு சிறுமியரின் ஆபாச காணொளி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள ஆறு பேரை, தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.