Chennai

News March 26, 2026

கொளத்தூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6ஆம் தேதி கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.

News March 26, 2026

சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 26, 2026

சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 26, 2026

சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீதிகளில் அமைக்கப்படும் அனைத்து விளம்பரப் பலகைகளுக்கும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் எனவும், அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமம் பெறப்படாத மற்றும் விதிமீறல் விளம்பரப் பலகைகளுக்கு ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

சென்னை: VOTER LISTல் பெயர் இல்லையா? இன்றே கடைசி!

image

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு <>இங்கே <<>>கிளிக் செய்து ‘Form 6’-ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி ‘Form 6’-ஐப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணை அழைக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க.

News March 26, 2026

BREAKING: சென்னையில் விஜய் பிரச்சாரம்

image

சென்னையில் வரும் 28ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் ஒரே நாளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் 3,000 பேர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

BREAKING: சென்னையில் விஜய் பிரச்சாரம்

image

சென்னையில் வரும் 28ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் ஒரே நாளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் 3,000 பேர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

BREAKING: சென்னையில் விஜய் பிரச்சாரம்

image

சென்னையில் வரும் 28ஆம் தேதி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் ஒரே நாளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியுள்ளார். ஒவ்வொரு இடத்திலும் 3,000 பேர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2026

சென்னை: கவனம் ஈர்க்கும் பெரம்பூர் தொகுதி!

image

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் பாமக போட்டியிடும் என நேற்று EPS அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, பெரம்பூரில் பிரளயம் எல்லாம் ஏற்படாது “விஜய் வந்தார்..விஜய் போனார்” என்றுதான் இருக்கும் என விமர்சித்துள்ளார். பெரம்பூர் தொகுதி இந்த முறை யாருக்கு?

News March 26, 2026

சென்னை: உள்ளாடைக்குள் கோடி கணக்கில் நகை!

image

சென்னை பெரம்பூர் இரயில் நிலையத்தில் இரண்டு பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் உள்ளாடைக்குள் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!