India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), அவரது நண்பரான கலைவாணன் (26) ஆகிய இருவரும் கடந்த 2015 மே 14-ம் தேதி ஆந்திராவில் கொள்ளையடித்த பணத்துடன் சென்னைக்கு வந்துள்ளனர்.அப்போது கொள்ளையடித்த பணத்தை பிரித்துக் கொடுக்குமாறு கலைவாணன் கேட்க, தரணி மறுத்துள்ளார்.பணத்தை பிரித்துக் கொடுக்க மறுத்த இளைஞரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை கொடுங்கையூரில் நான்காம் வகுப்பு படித்து வரும் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் மீன் வியாபாரி நல்லமுத்து என்பவரை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நல்லமுத்து என்பவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Indian Army Recruitment 2025: இந்திய ராணுவம் (Indian Army) காலியாகவுள்ள 76 NCC Special Entry பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. NCC சிறப்பு நுழைவு NCC Special Entry – பணிக்கு ஆண்கள் பெண்கள் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் NCC ‘B’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.எனவே விண்ணப்பதாரர்கள் 15.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னையில் மனிதக் கடத்தலை தடுக்கும் பயிற்சி வகுப்பிற்குப் பிறகு, ரயில்வே எஸ்.பி.ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் மட்டும் 2,300 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ரயில்வே, காவல்துறை, பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து செயல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார்.
ECR அருகே உள்ள வெளிச்சை பகுதியில், சாலையின் நடுவே கிரேனை நிறுத்தி உரிய அனுமதியின்றி ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, படக்குழுவுக்கு அனுமதி பெற்ற பிறகு மட்டும் ஷூட்டிங்கை தொடரலாம் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீரென ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிப்.22ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மாலை 6.46 மணி, 7.39 மணி, இரவு 10.20 மணி, 11.30 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. பிப்.23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரம் – கடற்கரை இடையே அதிகாலை 3.55 மணி, 4.15 மணி மின்சார ரயில்களும், கடற்கரை – தாம்பரம் இடையே அதிகாலை 4.15 மணி, காலை 6.15 மணி மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன. ஷேர் செய்யுங்கள்
உத்தண்டியைச் சேர்ந்தவர் சக்திவேல், (42). நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், கிண்டியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு பணிபுரிந்த 25 வயதான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில், கிண்டி போலீசார் சக்திவேலை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, நேற்று (பிப்.19) சக்திவேல் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தரணி (24), கலைவாணன் இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒரு காரிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்னை வந்தனர். கொள்ளையடித்த பணத்தை பிரித்து கொள்வதில் இருவருக்கும் தகராறு ஏற்பட, கலைவாணன் தனது கூட்டாளிகளுடன் தரணியை ஓடஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு விசாரணையின்போதே கலைவாணன் உயிரிழந்துவிட்டார். மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை ஐ.எம்.எஸ் நிறுவனத்தில், இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பாக திட்ட உதவியாளர், ஆராய்ச்சி கூட்டாளர் உள்ளிட்ட 7-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 20,000 முதல் 54,500 வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் விண்ணப்பிக்க பிப்ரவரி 28 கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரும்புவேர் என்ற லிங்கில் https://www.imsc.res.in/ பதிவு செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.