Chennai

News April 6, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய மாணவி!

image

சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி லேகா ஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். மதியம் மேல்மாடிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வராததால், பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். நண்பரிடம் கொடுத்த தங்க நகை திரும்ப கிடைக்காததால் மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

News April 6, 2026

BREAKING – சென்னையில் விஜய் பிரச்சாரம் ரத்து!

image

சென்னை, வில்லிவாக்கம் & தி.நகரில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், தி.நகரில் மதியம் 2 மணிக்கும் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் இருந்து 1 மணி நேரத்தில் தி.நகருக்கு செல்ல முடியாது என்கிற காரணத்தால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

BREAKING – சென்னையில் விஜய் பிரச்சாரம் ரத்து!

image

சென்னை, வில்லிவாக்கம் & தி.நகரில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், தி.நகரில் மதியம் 2 மணிக்கும் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் இருந்து 1 மணி நேரத்தில் தி.நகருக்கு செல்ல முடியாது என்கிற காரணத்தால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

BREAKING – சென்னையில் விஜய் பிரச்சாரம் ரத்து!

image

சென்னை, வில்லிவாக்கம் & தி.நகரில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையும், தி.நகரில் மதியம் 2 மணிக்கும் பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வில்லிவாக்கத்தில் இருந்து 1 மணி நேரத்தில் தி.நகருக்கு செல்ல முடியாது என்கிற காரணத்தால் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

BREAKING – சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!

image

தவெக தலைவர் விஜய் நாளை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வில்லிவாக்கத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை, தி.நகர் பகுதியில் மதியம் 2 மணிக்கு பிரசாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 300 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 5, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News April 5, 2026

சென்னை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 5, 2026

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

image

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நேற்று தொடங்கிய நிலையில், ஏப்.7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனகாரணமாக, இன்று (ஏப். 5) முதல் கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2026

நாளை மீண்டும் சென்னையில் விஜய் பரப்புரை

image

தவெக தலைவர் விஜய் தியாகராய நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளில் நாளை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மார்ச் 30ஆம் தேதி பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த பின் பரப்புரையை தொடங்கிய அவர், திருச்சி மற்றும் புதுச்சேரியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து மீண்டும் சென்னையில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் பரப்புரை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

News April 5, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!