Chennai

News February 26, 2025

மாநில மகளிர் ஹாக்கி போட்டி: சென்னை வெற்றி

image

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ‘அஸ்மிதா’ என்ற தலைப்பில் மாநில அளவிலான மகளிருக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதில், சென்னை அணி 3 – 0 என்ற கணக்கில் சேலத்தை வீழ்த்தியது. வீராங்கனைகள் ஜோதி லட்சுமி 7 மற்றும் 21ஆவது நிமிடங்களில் தலா ஒரு கோலும், பவித்ரா 46ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

News February 26, 2025

ஒரே நாளில் 2 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை

image

சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பெரிய சரக்கு கப்பல்கள் வருவது உண்டு. இந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 2 லட்சம் டன்னுக்கு மேல் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுகத்தில் 20ஆம் தேதி 2,06,848 டன், 21ஆம் தேதி 2,31,416 டன், 22ஆம் தேதி 2,46,886 டன், 23ஆம் தேதி 2,31,947 டன் கையாண்டுள்ளது.

News February 26, 2025

விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு

image

நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 26, 2025

3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து

image

சென்னையில் இருந்து மதுரை சென்ற 3 ஆம்னி பேருந்துகள், விருத்தாச்சலம் – வேப்பூர் மேம்பாலம் அருகே ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2025

தீராத நோயை குணப்படுத்தும் மருந்தீஸ்வரர் கோயில்

image

சென்னை திருவான்மியூரில் அமைந்திருக்கும் மருந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.அகத்தியர் இந்த தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். அகத்தியருக்கு, வைத்தியத்தைப் பற்றி இறைவன் உபதேசித்தருளியதால் இத்தலம் இப்பெயர் பெற்றது. இந்த தலத்திற்கு வந்து வழிபட்டு, பால் அபிஷேகம் செய்து விபூதி பிராசதம் உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பத நம்பிக்கை.தீராத நோய்கள் குணமடைய ஒருமுறை இங்கு செல்லுங்கள்.

News February 25, 2025

13 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

தி.நகரில் வசித்து வந்த 13 வயது சிறுமியை 2019 ம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி  2 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். புகாரின் பேரில் 19 வயது நபர் ஒருவர் 16 வயது இளஞ்சிறாரை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். நேற்று (பிப்.24) 19 வயது நபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் வழங்கியது. இளஞ்சிறார் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

News February 25, 2025

தமிழக பாஜகவின் கலைப்பிரிவு செயலாளர் விலகல்

image

தமிழக பாஜகவின் கலைப்பிரிவு செயலாளர் ரஞ்சனா நாச்சியார் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், “தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா? என்கிற கேள்வியை எழுப்பியது. அதனால் விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு

image

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால், அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மதுரை, பத்தூர், நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹூப்ளி, இம்பால், அகர்தலா உள்ளிட்ட 25 விமான நிலையங்களை தனியாருக்கு 50 வருட குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் போதும் சூப்பர் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னையில் மட்டும் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>> செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு இன்று நேர்காணல்

image

மத்திய அரசின் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு, முதன்மை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சலகம், சென்னை – 1 என்ற முகவரியில், இன்று காலை 11:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது. ஆர்வமுள்ள 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 044 – 2521 2549 என்ற தொலைபேசி எண் மூலம் விவரங்களை அறியலாம் என முதன்மை அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!