India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் காலை 5 மணி முதல் பீச் ஸ்டேசனுக்கு பதிலாக பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். சென்னை பூங்கா – தாம்பரம் வரை ஒவ்வொரு 20 நிமிட இடைவேளியில் ரயில் இயக்கப்படும். அதேபோல், பூங்கா – செங்கல்பட்டு வரை 23 ரயில்கள் இயக்கப்படும்.
பொதுமக்கள், குடிநீர் லாரியை முன்பதிவு செய்யலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 6,000 லிட்டர் குடிநீர் வண்டி – வீட்டிற்கு ரூ.435, வணிக பயன்பாட்டுக்கு – ரூ.735, 9,000 லிட்டர் வண்டி – வீட்டிற்கு ரூ.700, வணிக பயன்பாட்டுக்கு ரூ.1050, 16,000 லிட்டர் வண்டி – வீட்டிற்கு ரூ.1200, வணிக பயன்பாட்டுக்கு ரூ.1785 க்கும் கிடைக்கும். chennaimetrowater.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
சென்னை குடிநீர் வாரியம், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் எந்தவொரு நபரையும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், கழிவுநீர் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை மீறினால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவத்துறையிடம் விளக்கக் கடிதம் கொடுத்த யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு கேமராவுடன் சென்று வெட்டிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தான் வெளிநாட்டில் இருப்பதால், உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாக தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த குடும்பம் தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்றுள்ளனர். வாழப்பாடி அருகே உள்ள தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கார் மோதியது. காரில் இருந்த 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் குழந்தையின் பெற்றோர் தீபக் அழகப்பன், தெய்வானை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் சந்தைக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி மறுநாள் 1ஆம் தேதி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை விடுமுறை என கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த பேருந்துகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக, 180 கி.மீ. தூரத்துக்கு இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், 9ஆவது மண்டலம் 104ஆவது பிரிவு பகுதியில், மாநகராட்சி முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமார் 55,706 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், இந்த வாரம் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து 7,404 மரக்கன்றுகள் நடப்பட்டன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் நாளை (அக்.27) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.