India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உங்களது அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் மௌனம் காக்க வேண்டாம். இதனால் குற்றவாளி பலன் அடைகிறார். எனவே 24 மணி நேரமும் இயங்கும் எங்களது உதவி எண் 1930, அழைக்கவும் என காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பயணிகள் அதிக அளவில் வருவதை பயன்படுத்தி விமான கட்டணத்தை பல மடங்காக விமான நிறுவனங்கள் உயர்த்தின. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,925-ஆக அதிகரித்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு வருவதற்கு விமான கட்டணம் ரூ.11,109ஆக அதிகரித்துள்ளது.
திருவொற்றியூரில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 மாணவிகள் மயக்கமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வாயுக்கசிவு ஏற்பட்டு 10 நாட்களாக இப்பள்ளி பூட்டப்பட்டிருந்தது. மீண்டும் இன்று பள்ளி திறந்த நிலையில் 3 மாணவிகள் மயக்கமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
நவம்பர் 3-ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.ஆதம்பாக்கம், கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம், மயிலாப்பூர், நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.
சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில்,போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தை பாதுகாப்பை உறுதி செய்வது பற்றி வெளியிட்டுள்ளது. இதன்படி குழந்தை பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமை என்றும், ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 1098 என்ற குழந்தை உதவி எண்ணை அழைக்கவும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு முன், 1,000 ரூபாய் மாதாந்திர பேருந்து பாஸ் பெறுவது 1.50 லட்சமாக இருந்தது. பின், படிப்படியாக உயர்ந்தது. புறநகரில் வேலைக்கு செல்வோர் அதிகரிதது. இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், மாதாந்திர பயணத்திற்காக 1000 ரூபாய் பேருந்து பாஸ் பெறுவது தற்போது 96,000 கூடுதலாக அதாவது 20% அதிகரித்துள்ளது என்று போக்குவரத்துறை கூறியுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மதுரையில் இருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளில் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது மதுரையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும், படுத்து தூங்கி செல்லும் பேரூந்துகளில் ரூ.4,000 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழக அரசால், திருநங்கையருக்கான நலவாரியம் 2008இல் தொடங்கப்பட்டது. நல வாரியத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்றாண்டுகள் நிறைவடைந்தன. எனவே, வாரியத்தில் 2 புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட உள்ளன. எனவே, தகுதியான நபர்கள் தங்களது விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.