India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையில் இன்று (ஜன.18) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் மாநில வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் எனவும் இக்கூட்டத்தில் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

காற்று மாசு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் போர்டு அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த போர்டில் காற்றின் தரம், வெப்பநிலை, மழை அளவு என 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும். இதற்காக ரூ.6.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட நுழைவுவாயில் அருகே டிஜிட்டல் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.19) ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி வியாசர்பாடி, செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், ராதாகிருஷ்ணன் நகர், கே.வி.டி., தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் ஆகும்.

சென்னை மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நேற்று இரவு இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், டூவீலர் ஓட்டி வந்தவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இதற்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
Sorry, no posts matched your criteria.