India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை: போரூர் தனியார் தங்கும் விடுதியில், வரவேற்பாளர் பணிக்குச் சேர்ந்த வெளிமாநில பெண்ணிடம் விடுதியின் உரிமையாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று(பிப்.4) போலீசார், உரிமையாளரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வெளிமாநில பெண் உடமைகள் அனைத்தும் உரிமையாளர் பறித்து கொண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், சக்திவேல் (31) என்பவர் பந்தல் பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த, 7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை மகளிர் போலீசார், சக்திவேலை நேற்று(பிப்.3) போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.10.354 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில், OMR மேம்பால பாதையில், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள், தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ரூ.63.246 கோடி மதிப்பிலான, இந்த திட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகவலை சென்னை மெட்ரோ தலைமையகம் இன்று (பிப்.04) அறிவித்துள்ளது.

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

கோயம்பேடு அன்னம்மா நகர் 2-வது தெருவைச் பிரவீன் (19) ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பூட்டிய கதவை நீண்ட நேரமாக திறக்காததால் சதேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி ரூ.3.49 கோடி மதிப்பீட்டில் ‘சிட்டிசன் 360’ என்ற புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், வரிகள், உரிமங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் கொண்டு வரப்படும். புகார்களுக்கு விரைவான தீர்வு காணவும், நிர்வாக நடவடிக்கைகளை எளிதாகக் கண்காணிக்கவும் இது உதவும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ நடைபெற உள்ளது. வரும் பிப் 9- 11 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இப்பயிற்சியில், ட்ரோன் தொழில்நுட்பம், DGCA விதிமுறைகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்!
Sorry, no posts matched your criteria.