India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

சென்னை மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை பெற நீங்க அரசு ஆபீஸுக்கு ஏறி, இறங்கி அலைய வேண்டாம். 50 வகையான அரசு சேவைகள் & சான்றிதழ்களை எங்கேயும் அலையாமல், 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

பெண் குழந்தைகளுக்கு “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த் குமார் திரும்பி வந்து பார்த்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி மர்மமான முறையில் ரோஜா இறந்து கிடந்தார்.

சென்னை மாநகராட்சி 2025–26 ஆண்டிற்கான முதல் காலநிலை பட்ஜெட்டாக ரூ.1,341.2 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 62%க்கும் மேற்பட்ட நிதி வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், 240 கி.மீ. மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்நிலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்றைய(பிப்.17) பட்ஜெட் தாக்குதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 9 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் அருண் நேற்றிரவு(பிப்.16) உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, தரமணி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நீலகண்டன், மெரினா சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். யமுனா, கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பார்த்தசாரதி அடையாறுக்கு, அன்புமணி முத்தயால்பேட்டைக்கு மாற்றப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.