India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புளியந்தோப்பு, வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஷியாம் (25). இவர் திருமணமான ஓர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அப்பெண்ணுடன் கோவளம் சென்றவர், பிப்.13ஆம் தேதி வரை விடுதியில் தங்கியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அப்பெண்ணை அங்கேயே விட்டு இவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஷியாம், நேற்று(பிப்.17) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் நாய்கள் வளர்ப்போர்க்கு என விதிமுறைகள் மாநகராட்சியால் வகுக்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றாமல் இருந்த, 600க்கும் மேற்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு, தலா 500 ரூபாய் என, 3.27 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், உரிமம் பெறாத, 71 நாய்களின் உரிமையாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் என ரூ.3.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கால்நடை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <

சென்னையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான, தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை. கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துக்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்றார். அப்போது, ‘தவெகவுடன் கூட்டணி வைக்குமா?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ’ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது’ எனக் கூறினார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட கூட்டரங்கில் இன்று(பிப்.18) காலை 11:00 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 2026-27ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து பிப்.20ஆம் தேதி பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 80க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என கீழே கமெண்ட் பண்ணுங்க.

சென்னை; அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் தூய்மை பணியாளர், அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, போதையில் வந்த நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சர்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: தி.மலையைச் சேர்ந்தவர் ரோஜா (35) வழக்கறிஞரான இவர், நேற்று(பிப்.16) முன்தினம் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நண்பர் யஷ்வந்த் குமாருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். அன்றைய தினம், ஹோட்டலில் இருந்து வெளியே சென்ற யஷ்வந்த, திரும்பி வந்த போது, குளிக்கும் தொட்டியில் ஆடைகளின்றி ரோஜா இறந்து கிடந்தார். விசாரணையில், இது விபத்தாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி – பரங்கிமலை 5 கி.மீ தூரத்தை இணைக்கும் வகையில், பறக்கும் ரயில் வழித்தடதிட்டப்பணி, 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 17ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிகட்ட சோதனை அடுத்த மாதம் நடைபெறும் எனவும், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.