India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார இறுதி நாட்களை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உட்பட சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து 1,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 395 பேருந்துகளும், நாளை 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். www.tnstc.in இணைய முகவரி மற்றும் TNSTC என்ற செயலி மூலமாக முன்பதிவு செய்யலாம்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் மயிலை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செங்கல்பட்டு அம்பேத்கர் நகர் பகுதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நின்று இருந்த நிலையில் அங்கு பணியில் இருந்த போலீசார் இருவரையும் சோதனை செய்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இருவர் மீதும் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 25ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு 6 மில்லி மீட்டர், திருப்போரூர் 21, கேளம்பாக்கம் 40, திருக்கழுக்குன்றம் 0.24, மாமல்லபுரம் 12, தாம்பரம் 37, மொத்தம் 116.24 சராசரியாக 14.53 மழை பொழிந்துள்ளது.
மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காலாண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உடன், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கரன் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியில் செல்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கையில் குடை எடுத்துச் செல்லவும். பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த இரு தினங்களாக மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. செய்யூர், வண்டலூர், காட்டாங்குளத்தூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில், 2193 பயனாளிகளுக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், சுற்றுவட்டாரத்தைச் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆவலுடன் கலந்து கொண்டனர்.
ஜி.எம்.செஸ் அகாடமி மற்றும் சான் அகாடமி இணைந்து, வரும் அக்.6ஆம் தேதி காலை 6 மணிக்கு 2ஆவது மாநில செஸ் போட்டி மேற்கு தாம்பரம் சான் அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 பேருக்கும், 8 வயது பிரிவில் பங்கேற்போர் அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் வரும் அக்.4ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 99415 14097, 88382 29938 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்து சமய அறநிலையத் துறையின் காஞ்சிபுரம் மண்டலத்தில், செங்கல்பட்டு உதவி ஆணையராக லட்சுமிகாந்த பாரதிதாசன் பணிபுரிந்தார். இவர், காஞ்சிபுரம் உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பாற்றி வந்தார். அவர், கடந்த ஜூன் 30ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமியை செங்கல்பட்டு உதவி ஆணையராக நியமித்து அத்துறை செயலாளர் சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
எண்ணுார் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு தனி நிறுவனத்தை சி.எம்.டி.ஏ., உருவாக்கியது. இந்நிறுவனத்தில், தலைமை நிதி ஆலோசகர், தலைமை செயல்பாட்டு அலுவலர், நிறுவன செயலர், நகரமைப்பு வல்லுநர் உள்ளிட்ட 7 வகை இடங்களுக்கு வல்லுநர்களை தேடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மேலும், விவரங்களுக்கு www.cmdachennai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என சி.எம்.டி.ஏ. அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் – இன்பகனி தம்பதியரின் 2 வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடக்க முடியாமல் இடுப்பு பகுதி செயலிழந்தது. குழந்தையை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதித்ததில், முதுகு தண்டில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ரவிக்குமார் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர்.
Sorry, no posts matched your criteria.