India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் 29 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுடைய, குற்றப்பின்னணி இல்லாத தாம்பரம் பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன-31 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9952255493, 7418375910 அழைக்கலாம்.

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <

பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த அஜித்குமாரின் மனைவி சங்கீதா குழந்தை இல்லாத காரணத்தால் பிரிந்து சென்றார். இதனால் அஜித்துக்குமார் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் போனில் அழைத்தும் மனைவி வர மறுத்ததால், மனமுடைந்த அஜித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வியாசர்பாடியைச் சேர்ந்த அனுஸ்ரீ (20), செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திராவில் தனது தாத்தா இறந்த சோகத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு தந்தையிடம் போனில் பேசிவிட்டு, தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கேளம்பாக்கம் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 360 பேருந்துகளும், ஜனவரி 31ஆம் தேதி 485 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘கேஸ் நுகர்வோருக்கான குறைதீர்க்க கூட்டம் இன்று (ஜன- 29) மாலை 4.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் கேஸ் சம்பந்தமான பிரச்சனைகள் குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டு தீர்வு காணப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, பிப்ரவரி 2, 2024 அன்று தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன் 3ஆம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2ஆம் தேதி பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.