India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

செங்கல்பட்டில் மாதம் தோறும் 2வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்யப்படும். முகாம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மூலம் புதிய ரேஷன் கார்டு கோரி 2537 பேர் விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர் ஆகிய தாலுகாவில் இருந்து 1731 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட மக்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞருக்கு தாட்கோ மூலம் இலவச அழகு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். 90 நாட்கள் பயிற்சி முடித்தவுடன் ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <

மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குற்ற வழக்குகளிலும், சாலை விபத்துகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 10 கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் இறையன்பு(21). இவர் பழைய பெருங்களத்தூர், கிரீன் சிட்டி பகுதிக்கு இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்புக்கும், இறையன்புவின் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கும்பல் இறையன்புவின் வீட்டிற்கே சென்று வெட்டியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த அவரின் தந்தை, சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் குடும்பத்தினருக்கு உண்டு உறைவிட பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான சேர்க்கை ஆணைகள் இன்று (பிப்.18) வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆணைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.