Chengalpattu

News February 18, 2026

செங்கல்பட்டு: சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலி

image

திருப்போரூர், விரால்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (24), இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் பைக்கில், செங்கல்பட்டு – திருப்போரூர் சாலையில் சென்றார். அப்போது கொட்டமேடு அருகே சாலை வளைவில், எதிர்பாராமல் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 18, 2026

செங்கல்பட்டு: மின்சார ரயில்களின் அட்டவணை மாற்றம்

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வரும் பிப்.20 முதல் ஏப். 5ஆம் தேதி வரை (45 நாட்கள்), சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் அட்டவணையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அட்டவணை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: உயிரிழப்பு வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு

image

கல்பாக்கம் அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையேயான மோதலில், காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாக வதந்தி பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் வீடியோ கால் மூலம் அவர் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். வதந்தி பொய்யானது என தெரியவந்ததால் மக்கள் கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 18, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

செங்கை புத்தக திருவிழா 20 ஆம் தேதி துவக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 7 – வது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, மறைமலை நகர் நகராட்சி சமூக நலக்கூடத்தில் 20 முதல் 26 தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைக்க உள்ளார்.

News February 17, 2026

செங்கை: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, ஓட்டுநர் மட்டுமின்றி உடன் வரும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளில் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!