India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில், முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பமுள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள தொழில்முனைவோர், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
கடந்த 4 ஆண்டுகளில், ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சைபர் குற்றங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சைபர் கிரைம் போலீசார் நடத்தி வருகின்றனர். cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
தனியார் நிறுவன ஊழியர்கள், விடுமுறை நாட்களில் வீடுகளில் இருக்கும்போது, மொபைல்போனில் அழைக்கும் சைபர் குற்றவாளிகள், ஷேர் மார்க்கெட்டில் அதிக பணம் கிடைப்பதாக கூறி மோசடி செய்கின்றனர். அதன்பின், அவர்களின் மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்படுகிறது. இதேபோல், போலியான இணையதளங்களை துவக்கி, அவற்றின் வாயிலாகவும் பல லட்சம் ரூபாய் பெற்ற மோசடிகளில் திடீரென இணையதளத்தை முடக்கிவிட்டு வெளியேறிகின்றனர்.
வேலை வாய்ப்பு, தொழில் ரீதியாகவும் ஆன்லைன் மோசடி நடக்கிறது. கடந்த சில மாதங்களாக, ‘கூரியர்’ நிறுவனம் வாயிலாக போதைப்பொருள் வந்திருப்பதாக வீடியோ கால் வாயிலாக காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி., எஸ்.பி., அலுவலகம் அமைத்து, போலீஸ் அதிகாரிகளைப் போல் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமாதிரியான மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக, சைபர் கிரைம் போலீசில் 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில், ரூ.34.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ரூ.1.21 கோடி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. வீடியோ கால் வாயிலாக மற்றவர்களை தொடர்பு கொண்டு, ஆபாசமான முறையில் பேசியதை பதிவு செய்து மிரட்டும் செயல்களில் வடமாநில இளைஞர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
சென்னை-திண்டிவனம் இடையே தேசிய நெஞ்சாலையில், அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலை அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன்படி கருங்குழி-பூஞ்சேரி இடையே உள்ள 32 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. தற்போது செங்கல்பட்டு- திண்டிவனம் சாலையில் தினமும் 65,000 கார்களும், தாம்பரம்-திண்டிவனம் சாலையில் 1 லட்சம் கார்களும் கடந்து செல்கின்றன.
செங்கல்பட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் 1.8 கிமீ-க்கு ரூ.50, கூடுதலான ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.18, காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50, இரவு நேரத்தில் (இரவு 11 முதல் அதிகாலை 5) பகல் நேர கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மதுராந்தகம் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், பனையூர், கப்பிவாக்கம், சேம்புலிபுரம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு இருந்த கள் பானைகளை உடைத்தனர். அப்பகுதி மக்களிடம், கள் இறக்கும் தொழில், விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
நாடு முழுதும் இன்று குடியரசு தினவிழா நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு மாவட்ட ரயில் நடைமேடை, டிக்கெட் பரிசோதிக்கும் இடம், பயணியரின் உடைமை ஆகியவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். நடைமேடைகளில் ‘லக்கேஜ்’ உடன் வருவோர் மற்றும் பயணியர் கொண்டு வரும் ‘டிராவல் பேக்’ ஆக்கியவற்றையும், போலீசார் சோதனை செய்தனர். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள கடலோரங்களில், ஏராளமான ‘ஆலிவ் ரிட்லி’ கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவளம் கடற்கரையில் நேற்று (ஜன.25) ஒரே நாளில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இறந்து கிடந்த ஆமைகளை கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சமூக ஆர்வலர்கள் கடற்கரை மணலில் புதைத்தனர். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட ஆமைகள் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.