India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தெரிந்த நபர்களைப் போல வீடியோ சித்தரித்து, வீடியோ கால் மூலம் பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகளை நம்பாமல், உடனடியாக உண்மை தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகமான அழைப்புகள் வந்தால் சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு: பல்லாவரம் பகுதியில் நாளை (பிப்-21) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9.00 மணி முதல் மதியம் 02.30 மணி வரை நடைபெற உள்ளது. <

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

செங்கையில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை(பிப்.21) புனித தெரசா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளவும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (பிப்.20) முதல் ஏப்.5ஆம் தேதி வரை சில புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 05.45 மணி முதல் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதுடன், சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர், மறைமலைநகரில் தங்கி, கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்ததில் ஹரி(20) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார், முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்த 2 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Sorry, no posts matched your criteria.