India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

OPS-ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறிய EPS, OPS-ன் ஆதரவாளர்களை அதிமுகவில் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஜீவா செல்வம், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில், இன்று அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளனர்.

திமுக- காங்., கட்சியினருக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில், ‘ஆட்சியில் பங்கு’ என விஜய் கூறுவதை பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸுக்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC <<>>கூறியிருந்தார். இந்நிலையில், எங்களுக்கு யாரும் Boost தரத் தேவையில்லை. ஏற்கெனவே, எங்கள் தலைவர் ராகுல் Boost, Horlicks கொடுத்திருக்கிறார் எனக்கூறிய செல்வபெருந்தகை, SAC-யின் கூட்டணி அழைப்பை நிராகரித்துள்ளார்.

2016 – 2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 13-ம் தேதி சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட 32 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த திரைப்படங்களாக மாநகரம்-2016, அறம்-2017, பரியேறும் பெருமாள்-2018, அசுரன்-2019, கூழாங்கல்-2020, ஜெய்பீம் – 2021, கார்கி-2022 ஆகியவை தேர்வாகியுள்ளன.

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி டீசல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில், வேறொரு நபருடன் மனைவி உறவில் இருந்தை கணவர் கண்டித்ததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மனைவி அவரது காதலனுடன் இணைந்து கணவரை டீசல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார். கருகிய நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

VB-G RAM G திட்டம் 125 நாள்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக ஜனாதிபதி தன் உரையில் குறிப்பிட்டது தவறு என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தனது X பதிவில், போதிய நிதி ஒதுக்காததால் தான் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 50 நாள்கள் வேலைதான் வழங்கப்பட்டது. இந்நிலையில், 125 நாள்கள் உத்தரவாதம் அளித்தால் 2½ மடங்கு அதிக நிதியை அரசு ஒதுக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், இது ஒரு மாயை எனவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக குழந்தை பெற்ற சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிரமம் ஏற்படலாம். இதற்கு டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், ஒரு உணவுப் பொருளால் இந்த பிரச்னை சீராகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். பாலூட்டும் தாய்மார்கள் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அத்துடன் இது உங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும். அனைவருக்கும் SHARE THIS.

பிரபல பாடகர் <<18977992>>அர்ஜித் சிங்<<>>, இனி படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், தனது பூர்விகமான மேற்கு வங்கத்தில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யை போல சினிமா கரியரை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்களின் லிஸ்ட்டில் அர்ஜித் சிங்கும் இணைவாரா?

தேர்தலையொட்டி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன் நிலுவை பட்டியலை TN அரசு தயார் செய்து வருகிறதாம். மேலும், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் நகைக்கடன் குறித்த தேர்தல் வாக்குறுதியை அறிவிக்கவுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் 2 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெகவில் இணைந்ததாகக் கூறி, தவறான தகவல் வெளியிடப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், விஜய் ஆகியோருக்கு பிரபல தொழிலதிபர் கண்ணன் மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது மகன் மட்டுமே தவெகவில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், தவறான செய்தி வெளியிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ள அவர், கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.

பிப்ரவரிக்கான வங்கி விடுமுறை நாள்களை RBI வெளியிட்டுள்ளது. உள்ளூர் பண்டிகை காரணமாக சில மாநிலங்களில் 9 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது. ஆனால், தமிழகத்தில் வழக்கமான 6 நாள்கள் மட்டும் வங்கிகள் இயங்காது. அதாவது, பிப்.1, 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படாது. இதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் (பிப்.14, 18) வங்கிகள் விடுமுறையாகும். இந்த தேதிகளில் நேரடி வங்கி சேவை இருக்காது. உஷார் மக்களே!
Sorry, no posts matched your criteria.