India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் இருக்கும் பிற மாநிலத்தவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு சென்று வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு சட்டப்பேரவை மற்றும் MP-க்களை தமிழ் மக்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், SIR அடிப்படையில் இங்குள்ள பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால், தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சில வாஸ்து செடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடிகள் அமைதி, நல்வாழ்வு மற்றும் செழிப்பை வழங்குகின்றன. அவை எந்தெந்த செடிகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், வேறு ஏதேனும் செடி உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

Gpay, phonepe உள்ளிட்ட UPI சேவையில் வெற்றிகரமான & தோல்வி / ரத்தான பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஒரே செட்டில்மெண்ட் சுழற்சியில் கையாள்வதை நாளை முதல் (நவ.3) NPCI நிறுத்தியுள்ளது. மாறாக இருவித பரிவர்த்தனைகளும் தனித்தனி சுழற்சிகளில் கையாளப்படும். இதனால், உங்களின் தினசரி UPI பணப் பரிவர்த்தனை வேகமாகும். தோல்வியடைந்த டிரான்சாக்ஷனுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் இனி தாமதம் ஏற்படாது. SHARE IT

புகழ்பெற்ற நடிகர் டெக்கி கார்யோ(72) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லன் ரோலில் நடித்து உலகளவில் பிரபலமான இவர், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட், பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரான்ஸில் வசித்துவந்த இவரின் கடைசி காலத்தை, புற்றுநோய் கொடுமையாக்கியது. இறுதிவரை போராடியும் மீள முடியவில்லை. அவரது மறைவுக்கு கண்ணீருடன் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✱காலியிடங்கள் 161 ✱கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✱வயது: 18- 33 வரை ✱தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ✱முழு தகவலுக்கு <

SIR-ல் என்ன தவறு நடந்து விடப்போகிறது என திமுக அஞ்சுகிறது என TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, எப்படி தில்லுமுல்லு செய்ய முடியும் எனவும், கொடநாடு விவகாரத்தில் EPS-ஐ திண்டுக்கல் சீனிவாசன் கோர்த்துவிடப் பார்க்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொடநாடு விவகாரத்தில் <<18173992>>EPS அக்யூஸ்ட்<<>> என்றால் ஜெயிலில் போட வேண்டியதுதானே என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தம் மேற்கொள்ளும் அவகாசம் அக்.31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது, நவ.7(வெள்ளிக்கிழமை) வரை திருத்தம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே!

*கவுதம் கார்த்திக் நடித்து வந்த ‘ரூட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. *‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார், மீண்டும் படம் இயக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். *ரஜினியின் அடுத்த படம் பற்றிய அப்டேட், கமல் பிறந்தநாளான வரும் 7-ம் தேதி வெளியாகும் என தகவல். *‘பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அடுத்ததாக சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்குகிறார்.

ஜோதிட கணிப்பின்படி, செவ்வாய் – புதன் சேர்க்கை நிகழ்ந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *கடகம்: நிதி நிலை உறுதியாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். *விருச்சிகம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். *மகரம்: நிதி சார்ந்த பலன்கள் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு. *மீனம்: வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். சவால்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

₹2,000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ₹5,817 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு இன்னும் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.