India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், தெலங்கானாவிற்கு வர இருந்த ஆலையை, ஆந்திராவிற்கு இடம்பெயர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தெலங்கானாவில் இருந்து குஜராத்துக்கு ஒரு தொழிற்சாலை சென்றதாக குறிப்பிட்ட அவர், பாஜக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் சாடினார்.
நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். <
இழிவான நடத்தை கொண்டவர் EPS என OPS சாடியுள்ளார். மேலும், தலைமை பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத EPS-யிடம் ADMK சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், செல்லூர் ராஜு, தம்பிதுரை என ADMK மீண்டும் ஒன்றிணைய நினைக்கும் மூத்தத் தலைவர்களை குறிவைத்து அவர் அவமதிப்பு செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீண்ட காலம் அமைதி காத்த OPS மீண்டும் EPS-யை தாக்க தொடங்கியுள்ளார்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக மாறிவிட்டது Whatsapp. ஆனால், ஆபீஸில் தரும் லாப்டாப்களில் Whatsapp-ஐ பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. அப்படி செய்தால் உங்களது அலுவலகம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எளிதில் தெரிந்துக்கொள்ள முடியுமாம். Screen Monitoring, Malware போன்ற விஷயங்களை கொண்டு உங்கள் தகவல்களை திருடமுடியும் என்கின்றனர். SHARE.
தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
உங்க ஊர் என்ன? என்று கேட்டால், நாம் அருகிலுள்ள நகரம் (அ) மாவட்டத்தின் பெயரையே கூறுவோம். முகவரி எழுதும்போது மட்டுமே கிராமத்தின் பெயரை நினைவில்கொள்வோம். ஆனால், நாம் பிறந்த கிராமமோ (அ) டவுனோ தான் நமது அடையாளம். அவ்வாறான ஊர் பெயர்களில் உள்ள புரம், பட்டி, குளம், பாளையம் உள்ளிட்டவற்றின் அர்த்தங்கள் என்னவென்பதை மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். உங்கள் ஊர் என்னவென்பதை கமெண்ட் செய்யுங்கள்.
பிஹாரில் SIR மூலம் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிட ECI-க்கு SC உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 3 நாள்களுக்குள் டிஜிட்டல் வடிவில் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது விவரங்களை வெளியிட முடியாது என ECI கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
<<17398284>>அர்ஜுன் டெண்டுல்கர்<<>> – சானியா சந்தோக் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். மும்பை தொழிலதிபர் ரவி காயின் பேத்தியான சானியா, மற்ற இளம் தலைமுறையினரை போல் சமூக வலைதளங்களில் அதிகம் நாட்டம் காட்டியதில்லை. இந்தியாவில் முதல்முறையாக செல்லப் பிராணிகளுக்கென Mr. Paws எனும் மசாஜ் சென்டரை தொடங்கியவர். சாராவுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியுள்ளார் USA வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்., ஈடுபடுவதாக பாராட்டியுள்ள அவர், இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன், கனிம வளங்கள் ஆகியவற்றில் புதிய பொருளாதார ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறங்கு முகத்தில் இருக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு ₹1,440 சரிந்துள்ளது. ஆக. 8-ல் ₹75,760-க்கு விற்கப்பட்டு வந்த 1 சவரன், இன்றைய நிலவரப்படி ₹74,320-க்கு விற்பனையாகி வருகிறது. பொதுவாக, ஆடி மாதத்தில் கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. தற்போது, ஆவணி தொடங்க இருப்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் இந்த விலை சரிவை பயன்படுத்தி கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.