India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
1980இல் துவங்கப்பட்ட பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் இருந்தார். இதையடுத்து அக்கட்சி முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் 1984இல் போட்டியிட்டது. இதில் அக்கட்சி வெறும் 2 தொகுதிகளில் வென்றது. குஜராத்தில் ஏ.கே. பாட்டீல் என்பவரும், ஆந்திராவில் ஜங்கா ரெட்டி என்பவரும் வென்றனர். இதுபோல 2 தொகுதிகளில் மட்டுமே வென்று கணக்கை ஆரம்பித்து, தற்போது 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்துள்ளது.
என்.டி.ஏ கூட்டணியை விட்டு வெளியேறினால், அதிமுகவை இரண்டாக உடைத்து விடுவோமென இபிஎஸ்ஸை பாஜக மிரட்டியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். நாகையில் பேசிய அவர், “இ.டி., ஐ.டி., சி.பி.ஐ., ரெய்டு வரும் என அச்சுறுத்தினர். முக்கியமானவர்களை தூக்கி விடுவோம் என எச்சரித்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல், இனி பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் அறிவித்தார்” எனக் கூறினார்
RCB-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சூர்யகுமார் யாதவ் கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய அவர், முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். நேற்றைய போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கி தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். இதனால் 17 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 52(19) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
திமுக குடும்பத்தினரை முன்வைத்து அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, அக்கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தவர் வைகோ. ஆனால் இந்தத் தேர்தலில் தனது மகன் துரையை வேட்பாளராக அவர் களமிறக்கியுள்ளார். இதேபோல் பாமகவும், தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியாவை களமிறக்கியுள்ளது. இதை காணும் மக்கள், அந்த 2 கட்சிகளும் குடும்ப கட்சிகளாக மாறி விட்டதாக விமர்சித்து வருகின்றனர்.
LSG, DC அணிகள் இடையே 26ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைக்கொடுக்கும் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் 3இல் வென்ற LSG அணி அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது. DC அணி ஆடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தை எப்படியாவது வெல்ல வேண்டுமென கடுமையாகப் போராடலாம்.
2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றார். 2026இல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் ஆட்சியமைக்கும் வரை தொண்டர்கள் ஓய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால், ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமரானால், தேர்தல்கள் நடக்காது; மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும். இந்நாட்டையும் மக்களையும் காப்பாற்ற இந்தியா முழுதும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனக் கூறினார்.
தமிழகத்தில் நாதக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம் (வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழ்நாடு வங்கி ஏற்படுத்துவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அவர் இன்றுவரை வங்கியை ஏற்படுத்தவில்லை எனக் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாதென அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது, ஓபிஎஸ்சும், அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின் சில செயல்பாடுகள் இருந்ததாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கருதியதே பிரிந்ததற்கு காரணம் என்றும் பதிலளித்தார்
Sorry, no posts matched your criteria.