India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் மும்பை அணி, லக்னோ அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேஹல் வதேரா, டிம் டேவிட் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். லக்னோ அணியின் மோசின் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.
வரலாறு முக்கியம், N4 படங்களில் நடித்த பிரக்யா நாகரை, நடிகர் ஜெய் திருமணம் செய்தது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 40 வயது பேச்சுலராகவே இருப்பவர் ஜெய். இந்நிலையில், நடிகை பிரக்யா கழுத்தில் தாலியுடன், ஜெய்யும் அவரும் கையில் பாஸ்போர்ட் வைத்திருப்பது போன்ற போட்டோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், உண்மையான திருமணமா அல்லது சினிமா சூட்டிங்கா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. 3ஆம் கட்டத் தேர்தலின்போது, அந்தத் தொகுதிக்கு மே மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென முன்பு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு அடிப்படை அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, வாக்குப்பதிவை மே 25ஆம் தேதிக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
100 கிலோ பளு தூக்கிய புகைப்படத்தைப் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் தொடர்ந்து படங்களை அவர் நடித்து வருகிறார். மேலும் படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் உடல்பயிற்சியிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 100 கிலோ எடையைத் தூக்கிய படத்தை வெளியிட்டு, பீஸ்ட் போல உணர்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 2 கட்டங்களில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 66.14% வாக்குகளும் [ஆண்கள் (66.22%), பெண்கள் (66.07%), மூன்றாம் பாலினத்தவர்(31.32%)], 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% வாக்குகளும் [ஆண்கள் (66.99%), பெண்கள் (66.42%), மூன்றாம் பாலினத்தவர் ( 23.86%)] பதிவாகின.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ், பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகிறது. அந்த வகையில், வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், LED பல்புகள் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. இந்தப் பொருட்களை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஆந்திராவில் NDA கூட்டணி ஆட்சியமைத்தால், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுமென முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி நடைபெறுகிறது. கர்னூலில் நடந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு, அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார்.
இந்தியாவின் முன்னணி சோப் பவுடர் நிறுவனமான நிர்மா, ₹23,000 கோடிக்கும் மேல் வருவாய் கொண்டதாகும். குஜராத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகனான கர்சன்பாய் படேல் என்பவரே ₹15,000 கடன் வாங்கி அதனை 1969இல் தொடங்கினார். முதலில் சைக்கிளில் சென்று நிர்மா பவுடரை விற்றார். பிறகு சிறிய ஆலையை ஏற்படுத்தி, கிலோ ₹15க்கு விற்றதால், நல்ல வரவேற்பு பெற்று ஆண்டுக்கு ₹7,000 கோடி லாபம் ஈட்டி நிர்மா சாதனை படைத்தது.
கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 2ஆவது முறையாக விதியை மீறியதற்காக அவருடைய ஒரு நாள் ஊதியத்தையும் பிசிசிஐ அபராதமாக விதித்தது. ஐபிஎல் தொடரில் விதியை மீறியதற்காக வீரர் ஒருவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது இந்த சீசனில் இதுவே முதல்முறை.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை செல்கிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியே அக்கோயிலை திறந்து வைத்தார். இதை வைத்து, பழங்குடியினர் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்நிலையில் அயோத்திக்கு நாளை செல்லும் முர்மு, ஸ்ரீராமர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வழிபாடு நடத்தவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.