India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப், செப்டம்பர் 4ஆம் தேதி ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டுள்ளார். முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி டிரம்ப் உடன் விவாதம் செய்ய தயாராக இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படாத காரணத்தால், அவருடன் விவாதம் செய்ய டிரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் இன்று நிகழ்ந்த 3 வெவ்வேறு சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி 2 மகள்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல, விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் ஆசிரியர் உள்பட 4 பேரும், மதுரையில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வனச்சரகர்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில், 8 மணி நேரமாக போராடி தூரத்தில் இருந்த குடும்பங்களை காப்பாற்றிய அலுவலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய அவர், கட்சி வேறுபாடின்றி மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை, பாஜக எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அடையாளத்தில் ராகுல் இருக்கும் மார்பிங் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘சாதி தெரியாதவர் சாதிவாரி கணக்கெடுப்பை விரும்புகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, கங்கனா மதங்களை இழிவுபடுத்துவதாக சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதையடுத்து ராணுவம், இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேட்டூர் அணை பகுதியில் சிக்கியுள்ள நாயை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 16 கண் பகுதியில் 5 நாள்களுக்கு முன் சிக்கிய நாயை, NDRF குழு மீட்க ஆணையிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ட்ரோன் மூலம் நாய்க்கு உணவு வழங்குவதாகவும், நீர் வரத்து குறைந்துள்ளதால் NDRF உதவி தேவைப்படாது எனவும் தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஆக.6க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள பிசிசிஐ-யின் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) விரைவில் திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானங்கள் மற்றும் பயிற்சி ஆடுகளங்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். புதிய NCA-வில் உலகத்தரம் வாய்ந்த 3 மைதானங்கள், 45 பயிற்சி ஆடுகளங்கள், உட்புற ஆடுகளங்கள் என பல்வேறு அதி நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 2 நாள்களுக்கு முன் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமி, இலங்கை படையின் ரோந்து படகு மோதி பலியானார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 பேரை தற்போது, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலில் ஆக. 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 4 நாள்களாக பெய்த கனமழையால், பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 77 பேர் உயிரிழந்த நிலையில், 294 மின்மாற்றிகள், 120 குடிநீர் விநியோக குழாய்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுவரை அரசுக்கு ₹655 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக தமிழக காங்., எம்எல்ஏ.,க்கள் 18 பெரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருபவர்களுக்கு காங்., சார்பாக வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.