News August 19, 2024
BREAKING: புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக IAS அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம் 1991ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர். இந்நிலையில், அவர் தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News January 14, 2026
வா வாத்தியார்- எம்ஜிஆரா? நம்பியாரா? Review & Rating

✦தாத்தா ராஜ்கிரணால் எம்ஜிஆராக வளர்க்கப்படும் கார்த்தி, நம்பியாராக மாறி, மீண்டும் எப்படி எம்ஜிஆராகிறார் என்பதே ‘வா வாத்தியார்’ ✦பிளஸ்: கார்த்தி ஒன் மேன் ஷோ இந்த படம். பட்டையை கிளப்பியுள்ளார். ராஜ்கிரண் உள்பட மற்ற நடிகர்கள் கச்சிதம். இயக்குநர் நலனின் ஒன்லைன் காமெடியும், திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது. கேமரா, இசை அற்புதம் ✦பல்ப்ஸ்: 2-ம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. Rating: 2.5/5.
News January 14, 2026
சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
News January 14, 2026
வடநாட்டு பெண்கள் குறித்து தயாநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் பெண்களை படிக்கச் சொல்லும்போது, வட இந்தியாவில் பெண்களை வீட்டு அடுப்படியில் இருங்கள், குழந்தை பெற்றுக்கொடுங்கள் எனக் கூறுவதாக கல்லூரி விழாவில் தயாநிதி மாறன் பேசியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து BJP தலைவர் அனிலா சிங், அறிவு இல்லாமல் மாறன் மீண்டும் வட இந்திய பெண்களை அவமதித்துள்ளார். DMK-ல் இது வழக்கமானது என்றாலும், இதுபோன்று பேச எப்படி அனுமதிக்கப்படுகிறது என சாடியுள்ளார்.


