India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து, 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாபூரில் உள்ள பாபா கோயிலில் ஆன்மிக நிகழ்வின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் ஏராளமான குழந்தைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரேவாவில் 2 நாள்களுக்கு முன், சுவர் விழுந்து 4 குழந்தைகள் பலியான நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டதற்கு, தேர்வாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வரும் 11ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், சிலருக்கு தேர்வு மையங்கள் 1,000 கி.மீ தூரம் தாண்டி ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச்சேர்ந்த பலருக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 259 இடங்களில் தேர்வு நடந்த நிலையில், தற்போது அது 185 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய கொடி, தேசிய கீதம் இசைக்காமல் ட்ராம்போலின் போட்டியில் ஒருவர் பதக்கம் பெற்றுள்ளார். உக்ரைன் போர் காரணமாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இவ்விரு நாடுகளின் வீரர்களும், AIN என்ற நியூட்ரல் அணியின் கீழ் விளையாடி வருகிறார்கள். இதனால் பெலாரஸ் வீரர் லிட்விநோவிச், தங்கப் பதக்கம் வென்றும், தங்கள் நாட்டின் கொடியை பயன்படுத்த முடியவில்லை.
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். சைலேஷ்குமார்- தமிழக காவல்துறை வீட்டுவசதி வாரிய தலைவர், தினகரன்- சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி, செந்தில்குமார்- கோவை மேற்கு மண்டல ஐ.ஜி, ரூபேஷ்குமார்- நெல்லை ஆணையர், மகேந்திரகுமார்- சமூக நீதி, மனித உரிமைகள் ஐ.ஜி, சாமுண்டேஸ்வரி- டிஜிபி அலுவலக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுநிலை நீட் தேர்வுக்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக, ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 4 நகரங்களை தேர்வு செய்தால், அதில் ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு மாநிலத்திலும், 700 கி.மீ தொலைவிலும் தேர்வு மையம் ஒதுக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த முறையை விட, தற்போது தேர்வு மையங்கள் குறைக்கப்பட்ட நிலையில், ஆக.11இல் தேர்வு நடக்கிறது.
இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், இலங்கை வீரர் ஹசரங்கா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். தசைப்பிடிப்பால் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்ததற்கு, அவர் பெரும் பங்காற்றினார்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை
பெய்யக்கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கும் விராட் கோலி இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில், மேலும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 92 ரன்கள் எடுத்தால் அனைத்துவித போட்டிகளிலும் 27,000 ரன்கள் எடுத்த 4ஆவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்று 128 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்கள் எடுக்கும் 3ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அணுஆயுத நாடுகளான இந்தியா, சீனா இடையே ஆசியாவில் யார் வல்லரசாக உருவெடுப்பது என்பதில், கால் நூற்றாண்டாக போட்டி நிலவுகிறது. இந்தியாவை தனது எதிரியாகவும், போட்டியாளராகவும் பார்க்கும் சீனா, இந்தியாவை சுற்றியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், மாலத்தீவில் தனது செல்வாக்கை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது, இந்தியாவுக்கு தலைவலியாக மாறியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து சீனா தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்க ஈரானில் படைதளத்தை நிறுவும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. லடாக் எல்லையில் புதிய சாலை, விமானப்படை தளத்தை இந்தியா அமைத்து வருகிறது. ரஃபேல் விமானங்களை அங்கு தயாராக வைத்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளான இந்தியா, சீனா இடையேயான இந்தப் போட்டியால், ஆசிய கண்டத்தில் புதிய பதற்றம் நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.