news

News August 4, 2024

SBI-யில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் விளையாட்டு வீரர் இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலையில் 17 பதவிகளும், கிளரிக்கல் நிலையில் 51 பதவிகளும் என மொத்தம் 68 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக SBI தெரிவித்துள்ளது. வயது வரம்பு 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. <>https://bank.sbi/web/careers<<>>இல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News August 4, 2024

நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி நிதியுதவி

image

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

News August 4, 2024

நடிகர் அல்லு அர்ஜுன் ₹25 லட்சம் நிதியுதவி

image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்கள் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். அல்லு அர்ஜுனின் இந்த நல்ல மனதுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

News August 4, 2024

யார் இந்த கிட்டு (எ) ராமகிருஷ்ணன்?

image

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு (எ) ராமகிருஷ்ணன் நீண்ட அரசியல் அனுபவம் உடையவர். 25ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள அவர், மூன்று முறையாக நெல்லை மாநகர கவுன்சிலராக இருந்துள்ளார். கட்சியிலும், கவுன்சிலர்களிடம் அவருக்கு ஆதரவு உள்ளதால், திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. புதிய மேயர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

News August 4, 2024

காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வியை தழுவினார். காலிறுதியில் சீனாவின் முதல் நிலை வீராங்கனை லி கியானை எதிர்கொண்ட அவர் 1-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், 2ஆவது ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

News August 4, 2024

மாளவிகா மோகனனுக்கு ‘தங்கலான்’ படக்குழு வாழ்த்து

image

நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘தங்கலான்’ படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

News August 4, 2024

போலீஸ் எனக்கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் கைது

image

ஒடிசாவில் போலீஸ் எனக்கூறி, 5 பெண்களை திருமணம் செய்த சத்யஜித் சமால் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரையடுத்து, ஒரு பெண் அதிகாரியை பயன்படுத்தி, சமாலை பிடித்துள்ளனர். 6வது திருமணத்திற்காக பெண் அதிகாரியை பார்க்க வந்தபோது, அவர் கையும் களவுமாக பிடிபட்டார். சமாலிடமிருந்து கார், பைக், பல லட்சம் பணம், துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News August 4, 2024

கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு

image

திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தினம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், ராசி பலன் போல கொலைப் பட்டியலை நாளிதழில் பிரசுரிப்பது சட்ட ஒழுங்கு சீர்கேட்டை காட்டுவதாக சாடினார். வளர்ச்சி என்பது விளம்பரங்களால் வராது, சீரான சட்டம் ஒழுங்கே அதற்கான அடிப்படை எனவும் கூறினார்.

News August 4, 2024

மத்திய கல்வி அமைச்சகத்தில் ₹1.50 லட்சத்தில் வேலை

image

மத்திய கல்வி அமைச்சகத்தின் சமக்ரா சிக்ஷா திட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள்களே அவகாசம் உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான தலைமை கன்சல்டன்ட், மூத்த கன்சல்டன்ட், கன்சல்டன்ட் ஆகிய பதவிகளில் மொத்தம் 18
காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மாத ஊதியமாக ₹1.20 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 6ஆம் தேதியே கடைசி நாள் ஆகும்.

News August 4, 2024

ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி

image

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் பிரிட்டனை, இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பிறகு பெனால்டி ஷூட் முறையில் நடந்த ஆட்டத்தில், இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

error: Content is protected !!