News August 20, 2024
அண்ணாமலை படத்துடன் ஆட்டை வெட்டியவர்கள் மீது FIR

கிருஷ்ணகிரியில் ஆட்டை நடுரோட்டில் வெட்டிய சம்பவத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுகவை சேர்ந்த சிலர் ஆட்டுக்கு அண்ணாமலை படத்தை அணிவித்து நடுரோட்டில் வெட்டினர். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Similar News
News January 24, 2026
BIG NEWS: ஓபிஎஸ் உடன் திமுக அமைச்சர்.. புதிய பரபரப்பு

பேரவை முடிந்த கையோடு, சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் <<18942850>>சேகர் பாபு<<>> சந்தித்து 15 நிமிடங்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், அரசியல் ஏதும் பேசவில்லை என சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். OPS-ன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சிகளில் இணைவதால் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என அரசியல் களத்தில் கேள்வி எழுந்துள்ளது.
News January 24, 2026
பள்ளிகள் கட்டண திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழக பேரவையில் இன்று 5 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ்நாடு நீர்வளங்கள், தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்தம், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தல், பிச்சை எடுப்பதை தடுத்தல், பள்ளிகள் கட்டண திருத்தம் ஆகிய 5 மசோதாக்களை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் மேற்கண்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளன.
News January 24, 2026
பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.


