India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது இருக்கையில் இருந்து பணம் எடுத்ததாக கூறுவது ஆச்சரியமாக இருப்பதாக காங்., எம்பி அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். ராஜ்ய சபா சீட் No.222இல் இருந்து ₹500 ரொக்கம் பண்டலாக எடுக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எம்பியை வெளியேற்ற வேண்டும் என பாஜகவும், அதானி விவகாரத்தை திசைத் திரும்பும் சதி என காங்கிரசும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
UP காங்கிரஸைக் கூண்டோடு கலைத்து மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் SPயோடு கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 6 இடங்களில் மட்டுமே வென்றது. இடைத்தேர்தலில் களமிறங்காமல் SPக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், திடீரென UP காங்கிரஸை மொத்தமாகக் கலைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
USA, இந்தியா உள்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இந்த பிரச்னை நீடித்து வருவதாகவும், மெசேஜ், ரீல்ஸ் என எந்த சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 30 mntsக்கும் 150 புகார்கள் பதிவாவதாக Downdetector தரவுகள் கூறுகின்றன. உங்களுக்கு இன்ஸ்டா வேலை செய்கிறதா செக் பண்ணுங்க.
பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் கெய்புல் லாம்ஜாவோ தேசியப் பூங்கா, லோக்டாக் ஏரியில் அமைந்துள்ளது. நீரில் இருந்து மேலெழும்பிய தாவரங்கள் அடர்த்தியாக வளர, இது ஒரு தனித்துவ நிலப்பரப்பாக உருவாகிவிட்டது. அழிந்துவரும் கருதப்படும் சங்காய் என்ற மான் இனம் இந்த பூங்காவில் தான் உள்ளது. மேலும், பூங்கா பல்வேறு வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள் இருப்பிடமாக உள்ளன. நீங்க எப்போ ட்ரீப் கிளம்புறீங்க..?
AUSக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் IND 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸி.,வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (37), நிதிஷ்(42) ரன்கள் எடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி(7), ரோஹித் (3) ஆகியோர் சொதப்பினர். AUS அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் EPS மற்றும் சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களை விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீலகிரி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1) மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் – சீனா. 2) இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்பட்ட மன்னர் – சமுத்திர குப்தர். 3) NSE – National Stock Exchange 4) ISRO அமைப்பு 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 5) இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் – சு.விஜயலட்சுமி 6) திருக்குறளில் இரு முறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் 7) புவிக்கும், பிராக்ஸிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் – 4.3 ஒளியாண்டு.
சென்னை போரூர் ஏரியில் TN வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில் வேல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரைக் காணவில்லை என நேற்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் பவர் ஸ்டார் கிட்னி பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “எனக்கு பணக் கஷ்டம், கவலை, ஏமாற்றம்தான் நிறைய இருக்கு. நிறைய பேரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க. அதுல இருந்து மீள முடியாம, உடம்பையும் கவனிக்காம விட்டுட்டேன். ஆனா, என்னுடைய ஃபேன்ஸ் என்னை விட்டுக் கொடுக்க மாட்டாங்க” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.