India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கலுக்கு பிறகு விஜய்க்கு மீண்டும் சம்மன் அளிக்க CBI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் துயரம் தொடர்பாக 2 நாள்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விசாரணையில் இருந்து விஜய் விலக்கு கோரியதை CBI ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் சற்று நிம்மதி அடைந்துள்ளார். இன்று <<18837290>>விஜய்யிடம் 4:15 மணி நேரம் விசாரணை<<>> நடத்தப்பட்டது

குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் திமுகவுக்கு ஒருபுறம் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சும் தொடர்கிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய்யிடம் பேசலாம் என காங்கிரஸின் ஒரு தரப்பு ராகுலிடம் ஆலோசித்துள்ளனர். ஆனால், இப்போது பேச வேண்டாம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என கட்சியினருக்கு ராகுல் ஸ்ட்ரிக்ட்டாக அறிவுறுத்தியுள்ளாராம்.

பொங்கல் விருந்தாக கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஜன.14-ல் ரிலீசாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார். ₹21 கோடி கடன் பிரச்னை காரணமாக பட ரிலீசிற்கு மெட்ராஸ் HC தடைவிதிக்க, இன்று ₹3.75 கோடி தொகையை அவர் திருப்பி செலுத்தினார். இதையடுத்து ரிலீசிற்கு விதித்த தடையை நீக்குமாறு வாதிடப்பட்ட நிலையில், முழுத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதனால் வா வாத்தியார் ரிலீசில் சிக்கல் நீடிக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசாக ₹4,000 வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிதிச்சுமை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை ₹3,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பண்டிகைக்கு பின் பொங்கல் பரிசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெந்தயம், முருங்கை இலை, கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤வெந்தய விதைகளை ஊற வையுங்கள் ➤முருங்கை இலைகளை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும் ➤ இரண்டையும் கற்றாழையை சேர்த்து அரைக்கவும் ➤ அந்த பேஸ்ட்டை தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து, ₹90.23-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். இதன்காரணமாக, சமையல் எண்ணெய்கள், பருப்பு, உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், தங்கம், வெள்ளி விலையும் அதிகரிக்கும். இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

தமிழகத்தில் கடும்குளிரால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கடும்குளிரின் தீவிரம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று IMD தெரிவித்துள்ளது. பொதுவாக குளிர்காலங்களில், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இதன்காரணமாக, வயதானவர்கள், நோயுற்றவர்கள் கவனமுடன் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், நாளை அவரின் உடல்நிலை மற்றும் டிஸ்சார்ஜ் தொடர்பாக AIIMS அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நேந்திர வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால், வாரத்தில் 4 நாள்களாவது சாப்பிடுவது, பின்வரும் நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்குகிறது *உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது *ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை பாதுகாக்கிறது *எலும்புகளை வலுப்படுத்துகிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
Sorry, no posts matched your criteria.