India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தோட்டம் இல்லாதவர்களும் பழங்களை வளர்த்து சாப்பிட வேண்டுமா? வீட்டு மாடியில் அல்லது பால்கனியில் சில வகையான பழச் செடிகளை வளர்க்கலாம். குட்டை ரக செடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பூந்தொட்டியில் வைத்து வீடுகளிலேயே வளர்க்கலாம். இந்த செடிகளுக்கு 6-8 நேரம் சூரிய ஒளியும், சரியான பராமரிப்பும் தேவை. அந்த வகையில், என்னென்ன பழச் செடிகள் வளர்க்கலாம் என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.

பிரபலங்கள் பேசும் சிறிய விஷயங்கள் கூட நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி, ‘எனக்கு ஒயின் பிடிக்கும், நான் அதை ஸ்ப்ரைட்டுடன் சேர்த்து குடிக்கிறேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கொக்க கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3 நாள்களில் ₹1.16 லட்சம் கோடி அதிகரித்தது. 2021-ல் ரொனால்டோ கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்ததால் பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாடகரும் நடிகருமான பிரஷாந்த் தமாங் நேற்று காலமானார். அவருடைய மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவரது மனைவி மார்த்தா அலே விளக்கமளித்துள்ளார். பிரஷாந்த் தமாங்கின் மரணம் முற்றிலும் இயற்கையானது; தூங்கும்போதே அவரது உயிர் பிரிந்ததாக உருக்கமாக தெரிவித்துள்ள மார்த்தா அலே, இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் ஹாலிவுட்டில் நடித்துள்ளனர். ஆனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பாலிவுட் படங்களில் நடிப்பது அரிது! இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ஷாருக்கானுடன் நடிக்க ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். துபாய் நிகழ்ச்சியில் பேசிய அவர், சல்மான் கான், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து நடிக்க பல ஆண்டுகளாக பேசி வருவதாகவும், ஆனால் எதுவும் கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ₹3000 ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.8-ம் தேதி முதல் இன்று வரை சுமார் 2,04,10,899 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகை ₹6,123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ex இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு அவரது காதலி சோஃபி ஷைனியுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தனது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள போட்டோவை ஷிகர் தவான் SM-ல் பகிர்ந்துள்ளார். இதற்கு ❤️❤️❤️ பதிவிட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். ஏற்கெனவே, ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2023-ல் ஷிகர் தவான் விவகாரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிறு) தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.

கரூர் துயரத்திற்கு தானும், TVK நிர்வாகிகளும் பொறுப்பல்ல என CBI அதிகாரிகளிடம் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையில் பல கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அங்கிருந்து தான் புறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலுக்கு TN அரசே காரணம் என விஜய் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

AI-ன் அதிவேக வளர்ச்சி காரணமாக டாக்டருக்கு படிப்பது பயனற்றதாக மாறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. வரும் காலங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களை விட, ரோபோக்கள் சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளார். மேலும், தற்போது அதிபருக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையை விட சிறந்த சேவை ஒரு சாமானியருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் குழந்தை எந்த கஷ்டமும் படக்கூடாது என எண்ணி அவர்களை பொத்தி பொத்தி வளர்க்குறீங்களா? உங்கள் ஓவர் பாசம், பிற்காலத்தில் பெரும் பிரச்னையாக மாறும். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் இந்த உலகத்தில் சர்வைவ் ஆவது கடினமாகிறது. அவர்களுக்கு பிரச்னைகளை எப்படி கையாள்வது, சக மனிதர்களை எப்படி புரிந்துகொள்வது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் போய்விடும். எனவே அவர்களை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. SHARE.
Sorry, no posts matched your criteria.