India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காகவே CBI-ஐ வைத்து பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது . இந்நிலையில், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொள்வது போல சிபிஐ வலையில் விஜய் சிக்கியிருக்கிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். CBI-ஐ பாஜக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதை பயன்படுத்திதான் பாஜக விஜய்யை டெல்லிக்கு அழைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இன்று (ஜனவரி 12) முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளது. IRCTC கணக்குடன் இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள், உங்கள் போனில் இருக்கும் முன்பதிவு ஆப்பிலேயே ஆதாரை அப்டேட் செய்யலாம். ஆதாரை இணைக்கவில்லை எனில், டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில், உயிர்காக்கும் ஹாஸ்பிடல்கள் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக மாறும் அளவுக்கு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். TN-யையும், TN மக்களையும் காப்பாற்ற ஒரே வழி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்க காலண்டரை திருப்பி பாருங்க. பிப்ரவரியில் சரியாக 28 நாள்கள், 4 வாரங்கள் வரும். 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி 28-ம் தேதி சனிக்கிழமையில் முடிகிறது. Non- Leap வருடங்களில் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதே, Perfect February-யாக அமைகிறது. கச்சிதமாக வரும் இந்த February 6 அல்லது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். முன்னர், 2015-ல் நிகழ்ந்தது. அடுத்ததாக 2037-ல் தான் நிகழுமாம். SHARE IT.

உயிர் காக்கும் அரசு ஹாஸ்பிடல்கள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது கடும் வேதனை அளிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் புகுந்து மகப்பேறு வார்டு அருகே இளைஞர் ஒருவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதற்கு விளம்பர மாடல் திமுக அரசு தான் காரணம் என குற்றஞ்சாட்டிய EPS, இன்னும் 3 மாதங்களில் இதற்கெல்லாம் முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க கோரி, படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை நாளை நடைபெறலாம் என கூறப்படுகிறது. வழக்கை முடித்த கையோடு விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய KVN நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் படத்திற்கு ஆதரவான முடிவு வருமா? என்பதில் நிச்சயமற்ற நிலையே உள்ளது.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ‘நீயே விடை’ என்ற நிறுவனம் அனுமதியின்றி தனது புகைப்படம், பெயர், பிரபல வசனத்தை பயன்படுத்தி, டி-சர்ட்கள், சர்ட்களை விற்பனை செய்வதை சுட்டிக்காட்டி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த உரிமையியல் வழக்கை விசாரித்த சென்னை HC, தடை உத்தரவை பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி மாதம் ஒத்திவைத்தது.

அதிமுக கூட்டணியில் இணைய மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக EPS கூறியுள்ளார். அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது பேசிய அவர், இன்னும் ஓரிரு நாள்களில் புதிய கட்சி அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் அமமுக, தேமுதிக இணையலாம் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌஷல்யா யோஜனா திட்டம் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சேருபவர்களுக்கு 2 முதல் 6 மாதங்களுக்கு, மாதம் ₹6000 ஊக்கத்தொகையும் கிடைக்கும். இதற்கு 15 முதல் 35 வயதுடைய இளைஞர்களும், 45 வயதுக்குள் இருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் 2 மணிநேரத்திற்கும் மேலாக CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழுவினர் 56 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அளித்திருந்த பதில்களுடன் விஜய் அளிக்கும் பதிலில் ஏதேனும் முரண்பாடாக இருந்தால் அது, விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.