India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ADMK கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையானது, சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் <<15115542>>மா.சுப்பிரமணியன்<<>> கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2002இல் அதிமுக கவுன்சிலர்கள் தாக்கியதில் திமுக கவுன்சிலர்கள் தான் பலத்த காயமடைந்ததாக குறிப்பிட்டார். புனையப்பட்ட இந்த வழக்கால் 22 ஆண்டுகளாக கோர்ட் படிகளை ஏறும் நிலைக்கு ஆளானேன் என்றார்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க 2025 குற்றவியல் திருத்த சட்டமுன்வடிவை பேரவையில் CM ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமலும், அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை கடும் தண்டனை அளிக்க இம்மசோதா வகை செய்கிறது. பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை வெளியிட்டால் 3- 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தவெகவின் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ள நபர்கள் இன்று இறுதி செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் 100 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பு, இறுதி செய்யப்படும் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 2002இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாட்சியம் அளித்தவர்கள் பிறழ்சாட்சியாக மாறியதாலும், சரிவர நிரூபிக்காததாலும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆலோசகராக (mentor), தோனி நியமிக்கப்படலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவர் ஏற்கெனவே 2021 T20 WC-ல் ஆலோசகராக இருந்துள்ளதால், அது உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் நம்புகின்றனர். ஆனால், இதுகுறித்து BCCI தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை. தோனி mentor ஆக வந்தால் இந்திய அணிக்கு பயனளிக்குமா?
எக்ஸ்ஸாமில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லிக்கு தலைவலியாக இருந்த வெடிகுண்டு மிரட்டலை தீவிரமாக விசாரித்த போலீசார், சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர். இவர், இதுவரை 6 முறை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததும், ஒரே முறை 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
ரயிலில் சில நிமிடங்களில் விற்றுத் தீரும் தட்கல் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் பண்ண இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *அதிவேக Internet உள்ள பகுதியில் இருங்கள். *ACக்கு காலை 9.58க்குள்ளும், Sleeperக்கு 10.58க்குள்ளும் IRCTCயை லாகின் செய்து உள்ளே சென்றுவிடுங்க. *Captcha Codeஐ கவனமாக Enter செய்யுங்க.*கிரெடிட் கார்டை வைத்து புக் செய்வதை விட, IRCTC ewallet (அ) UPI மூலம் விரைவாக புக் செய்யலாம். Happy Pongal..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. பொங்கல் பண்டிகை விடுமுறையால், இன்றும், ஜன.13, 17ல் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். தொடர்ந்து, ஜன.18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஜன.20ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்நிலையில், இன்று முதல் ஆளாக சுயேட்சையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பெண்ணை பின்தொடர்ந்தால் பிணையில் விடுவிக்காதபடி, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தத்தை பேரவையில் CM ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். அதில், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகளை வரை சிறை தண்டனை விதிக்கவும், ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.