India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு இன்று(பிப்.10) அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. அதேபோல், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகளில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. 1 – 2 வயது குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 -19 வயதினருக்கு 1 மாத்திரை வழங்கப்படும். காலை (அ) மதிய உணவுக்கு பிறகு 30 நிமிடங்கள் கழித்து மாத்திரையை சாப்பிட வேண்டும்.

IND-க்கு எதிராக T20I WC-ல் PAK விளையாடும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேற்றை தினம், அடுக்கடுக்கான<<19089225>>கண்டிஷன்களை<<>> பாகிஸ்தான் வைத்திருந்த நிலையில், தற்போது அந்த அணி நிர்வாகம் மொத்தமாக U turn அடித்துள்ளது. வங்கதேசம், இலங்கை, UAE உள்ளிட்ட நட்பு நாடுகளுடைய கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக PAK PM ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையில் அணி அமைத்தாலும், தமிழகத்தில் NDA கூட்டணியின் ஆட்சியே நடக்கும் என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசியிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு துணை முதல்வர் பதவி கூட கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுதியான அளவில் சீட் ஷேரிங் நடக்கும். குறிப்பாக, பாஜகவிற்கு 40 தொகுதிகளை உறுதியாக கேட்டுபெறுவோம் எனவும் கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்.

தினமும் காலையில் எழுந்ததும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் நாளின் தொடக்கத்தில் வெந்நீர் குடித்து தொடங்குவது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு மிதமான வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

கூட்டணி குறித்து வரும் பிப்.14-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் சிந்தனையே இல்லை என்றார். தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டி என்ற வரலாற்றை உடைக்க விரும்புவதாகவும், 2026-ல் அமையும் ஆட்சியில் புதிய தமிழகம் பங்கு பெற வேண்டும் என்பதே இலக்கு எனவும் கூறியுள்ளார்.

இந்த பழக்கம் உங்கக்கிட்ட இருந்தா, இச்செய்தி உங்களுக்குதான். காலை எழுந்ததும் மொபைல் பார்க்கும் பழக்கம் நமது மன அழுத்தத்தை அதிகரிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இரவில் வரும் மெசேஜ்கள், தவறவிட்ட செய்திகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக காலையில் படிக்கும்போது அது தேவையற்ற மனப்பதற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் அன்றைய நாள் முழுவதும் நாம் ஒருவித அழுத்தத்திலேயே இருக்க நேரிடுகிறது.

காங்கிரஸில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது திமுக – காங்., கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்டணியில் இருப்பதால் செல்வப்பெருந்தகை உடன் போஸ் கொடுக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரது பேச்சு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்காமல் திமுக காலம் தாழ்த்துவது புகைச்சலாக உள்ளது.

எரிபொருள், பராமரிப்பு செலவு அதிகரிப்பு இருந்தும், ஆட்டோ கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என புகார் எழுந்தது. பின்னர், இதுதொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்கள், உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் காஞ்சி, செங்கை, திருவள்ளூரிலும் சேவைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அரசு பள்ளி <<19093789>>மாணவி <<>>விஷப்பூச்சி கடித்து பலியான செய்தி மனதை பதைபதைக்கச் செய்வதாக நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தானே, விஷப்பூச்சிகளும் பாம்புகளும் ஊர்ந்தால் என்ன, என்று திமுக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் திமுக அரசைத் தமிழக மக்கள் துரத்தியடிப்பர் எனவும் கூறியுள்ளார்.

பிரசாதம் என்றாலே புளியோதரை, சுண்டல்தான் நினைவுக்கு வரும். ஆனால், தூத்துக்குடியிலுள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் மண்தான் பிரசாதம். 1880-ல் பிறந்து வாழ்ந்த அருணாசல சுவாமிகளின் ஜீவசமாதியான இவ்விடத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிடித்தவர்கள் இங்கு வழிபட்டால், குணமடைவார்களாம். பிரசாதமான புற்றுமண் & கருப்பு மையை உடலில் பூசினால், நோய்கள் விலகுமாம்.
Sorry, no posts matched your criteria.