India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியுள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வந்தவுடன் படக்குழு அடுத்தகட்ட அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகள், கணிசமாக விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு, விஜய் ஒரு நடிகர்; அவருக்கான ரசிகர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக என அனைத்து கட்சிகளிலும் இருப்பார்கள் என அப்பாவு தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதால், மு.க.ஸ்டாலினை மக்கள் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுப்பார்கள் என்றார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் கிளையின் தீர்ப்பு செல்லும் என்று SC தெளிவுபடுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜகவின் வினோஜ் பி செல்வம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்நோக்கம் இருப்பதாக தவறான குற்றச்சாட்டை பரப்பி, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்த திமுக மன்னிப்பு கேட்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

*வருவதும் போவதும் இன்பமும் துன்பமும்;
வந்தால் போகாதது புகழும் பழியும்;
போனால் வராதது மானமும் உயிரும்;
தானாக வருவது இளமையும் மூப்பும்;
நம்முடன் வருவது பாவமும் புண்ணியமும்
*அன்பும் மரியாதையும் இருப்பவன்
உலகத்தில் எதையும் சாதித்து விடுவான்.
தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
*இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு.
மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை

ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்றும், அவருக்கே மாம்பழம் சின்னம் சொந்தம் எனவும் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது. பாமக தொடர்பான வழக்குகளில் ராமதாஸ் பின்னடைவு சந்தித்து வருகிறார். இதனால் கட்சி (பாமக), சின்னம் இல்லாமல் ராமதாஸ் தரப்பு வரும் தேர்தலில் எப்படி எதிர்கொள்ளப்போகிறது; எதன் அடிப்படையில் கூட்டணி அமைக்கும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

2025-26ஆம் ஆண்டுக்கான BCCI-யின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை. 2023-24 சீசனுக்கான ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். தற்போது, ஸ்ரேயாஸ் ஒப்பந்தத்தில் சேர்த்த BCCI, இஷான் கிஷனை இணைக்கவில்லை. இதனையடுத்து, சிறப்பாக விளையாடும் அவரை மீண்டும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள திமுக (கலைஞர்), அதிமுக (நியூஸ் J), விசிக (வெளிச்சம்) என ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியாக செய்தி சேனல்கள் வைத்திருக்கின்றன. இதன்மூலம் தேர்தல் பரப்புரை மற்றும் தங்களின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும். அதுபோலதான் தற்போது, ‘எங்கள் தேசம்’ என்ற பெயரில் வலை தொலைக்காட்சியை பிப்.14-ம் தேதி சீமான் தொடங்கி வைக்கிறார். இது TV சேனலாக உருவெடுக்கிறது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் மூலம் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் பனியன் தொழிலை ஊக்குவிப்பது தொடர்பாக பிரதமரிடம் EPS தொடர் கோரிக்கை வைத்தார். தற்போது மோடி, டிரம்பிடம் ராஜதந்திரமாக பேசி வரியை குறைத்துள்ளார். இதனால், திருப்பூர் தொழிலாளர்கள் இனி சுகமாக இருப்பார்கள்; மக்களின் வாழ்வாதாரமும் சிறப்பாக இருக்கும் என்றார்.

மாநிலங்களவையில் பியூஷ் கோயல் மீது திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை முதலில் அவையில்தான் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் பேசியது நாடாளுமன்ற மரபுகளையும், அவையின் உரிமையும் மீறும் செயல் என அவர் கூறியுள்ளார்.

கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், தேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், தேமுதிக அலுவலகம் வெறிச்சோடியது. பிப்.12-க்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், 4-வது நாளான நேற்று (பிப்.9) விருப்ப மனுவை வாங்க ஒருவர் கூட வரவில்லை என்பதால் பிரேமலதா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.