India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் PM மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்பத்திற்கு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது என PM மோடி அறிவுறுத்தினார். மேலும் தேர்வு பற்றி, தான் எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மாணவர்களுக்கு கூறினார். இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் ஆற்றல் மற்றும் ஆர்வம் தன்னை வியக்க வைத்ததாக மோடி பாராட்டியுள்ளார்.

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவன தரப்பு முறைப்படி வாபஸ் பெற்றுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப படக்குழு தயாராகிவிட்டதாம். எனவே, பிப்.20 (அ) இம்மாத இறுதிக்குள் படம் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் <<19097730>>ஒப்புக்கொண்டதற்கு <<>>இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற உள்ள இந்தியா – பாக்., ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாகவும், இதை சாத்தியப்படுத்திய ICC-க்கு நன்றி எனவும் கூறியுள்ளார். 1996 WC-ல் பாதுகாப்பு காரணங்களால் மற்ற அணிகள் விளையாடாத போது, இந்தியா- பாக்., மட்டும் கொழும்பில் விளையாடியதை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் சேர்ந்திருப்பவர்கள் புதுச்சிந்தனை உள்ளவர்களா என CPI வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப்போர் காலங்களில் முன்னோர்கள் கனவு கண்ட சமூகம் நமக்கு தேவை என்ற அவர், அதுபற்றிய சிந்தனை விஜய்யிடம் எதாவது இருக்கிறாதா எனவும் கேட்டுள்ளார். மேலும், உலகம் முழுவதும் வலது, இடது என இரு கொள்கைதான் இருக்கிறது எனவும் அதில் விஜய் எந்த பக்கம் என்பதை அவர் முதலில் சொல்லட்டும் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் முகத்துக்கு எந்த மாதிரியான Hairstyle எடுப்பாக இருக்கும் என தெரியவில்லையா? அந்த பிரச்னையை சரி செய்ய ஒரு செயலி இருக்கிறது. Playstore-ல் உள்ள ‘HiFace’ (அ) Hairstyle Try On ஆகிய செயலிகளின் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்து, அதில் செல்ஃபியை அப்லோடு செய்தால் போதும். முகத்திற்கு ஏற்ற Beard Style, Hairstyle, Sunglasses-ஐ அதுவே பரிந்துரைக்கும். இது சொல்வதை போல நீங்கள் Try செய்து பாருங்கள். SHARE.

தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்.14-ம் தேதி அமித்ஷா சேலம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாம். சக்தி கேந்திரா என்பது தேர்தல், கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் பிரிவு ஆகும். வாக்குச்சாவடிகள், பிரசாரம் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ்தான் வருகின்றன. சுமார் 25,000 பேர் இந்த பிரிவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

TN-ல் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கன் சாப்பிடுவோர் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனவும், ஆப் பாயில் சாப்பிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும், மர்மமான முறையில் உயிரிழந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தவெக வெறும் கானல் நீர் தான் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். வெயில் காலம் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இச்சமயத்தில் தென்படும் கானல் நீர் சில நிமிடங்களில் காணாமல் போய் விடும் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய் ‘தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி’ என்று கூறுவது, அவர்களில் யார் எதிர்க்கட்சியாக வரப்போகின்றனர் என்பதற்கான போட்டியாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 13 ஆண்டுகளாக அப்பொறுப்பிலிருந்த கேசவ விநாயகம் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார். அதன் <<19095269>>பின்னணியில் அண்ணாமலை<<>> கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில், RSS-ன் வட தமிழக அமைப்பாளராக இருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரஷோப குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் பயணித்த ரப்பர் படகு லிபியா கடற்பரப்பில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத படகில் பலர் பயணித்ததே விபத்துக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவுக்கு செல்ல அகதிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில், 2026-ல் மட்டும் கிட்டதட்ட 500 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.