India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் விஷால் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு காவல்துறை அதிகாரியாக அண்ணாமலை இருந்தார். இந்தப் பின்னணியை வைத்துப் படம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதில் விஷால் நடிக்க இருப்பதாகவும் பரவி வரும் தகவல் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
சென்னையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது போக்குவரத்துக் காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம். முதல்நாளில் பிடிபட்டோருக்கு ரூ.500 அபராதம் விதித்து அறிவுரை வழங்கிய போலீசார், அடுத்த முறை பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்து அனுப்பினர். வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை இன்று அமலுக்கு வந்தது.
உடல்நலக் குறைவால் காலமான, தமிழ் சினிமா பின்னணி பாடகி உமா ரமணின் உடல் தகனம் செய்யப்பட்டது. MSV, இளையராஜா உள்ளிட்டோரின் இசையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்த அவர், நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தாமஸ் கோப்பை ஆண்கள் குழு பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா தோல்வியைத் தழுவியது. சீனாவின் செங்டு நகரில் நடைபெற்ற ஆண்களுக்கான 33ஆவது தாமஸ் கோப்பை இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சீனாவை எதிர்கொண்ட இந்தியா 1-3 என்ற செட்களில் தோல்வியடைந்தது. ஒற்றையர் பிரிவில் மட்டும் இந்தியாவின் லக்ஷ்யா சென், சீனாவின் லி ஷி ஃபெங்கை 13-21, 21-8,21-14 என்ற செட்களில் வீழ்த்தினார்.
9 நாள்களாகியும் தமது சவால்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்கவில்லை என்று பிரதமர் மோடி சாடியுள்ளார். மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என காங்கிரஸ் உறுதியளிக்க முடியுமா என்று மோடி சவால் விடுத்திருந்தார். இதுகுறித்து குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தாம் சவால் விடுத்தும் காங்கிரஸ் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், இது சந்தேகத்தை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்துப் பேசுவோர் கிரிக்கெட்டைப் பற்றி அறியாதவர்கள் என டி வில்லியர்ஸ் விமர்சித்துள்ளார். கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரரான கோலியை விமர்சிப்பவர்கள், இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் கோலி 2ஆவது இடத்தில் இருந்தும், ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக அவர் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ₹7,961 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்று RBI தெரிவித்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக RBI 2023 மே மாதம் அறிவித்தது. அப்போது ₹3.56 லட்சம் கோடி மதிப்பு ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் 97.76% திரும்பி வந்து விட்டதாகவும், 2.24% திரும்பவில்லை என்றும் RBI தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 , 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக் கல்வித்துறை அனுமதி கேட்டுள்ளது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியும், முடிவுகளை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகளும் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திட்டமிட்டபடி மே 6ல் +2 தேர்வு முடிவுகளையும், அதன்பிறகு 10, +1 தேர்வு முடிவுகளையும் வெளியிட அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு யாரும் மாற்றாக வர முடியாதென இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஜித் அகர்கர் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘துணைக் கேப்டன் தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி வெற்றிப்பெற வைத்துள்ளார். பந்துவீச்சிலும் பாண்டியா தனது திறமையை வெளிப்படுத்துவார்’ என்றார்.
இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கத் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க விரும்புவோர் www.tnonlinegamingauthority.com இணையத்தளம், tnoga@tn.gov.in மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.