News May 14, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ 96 தொகுதிகளில் நடைபெற்ற 4ஆம் கட்ட தேர்தலில் 63.04% வாக்குப்பதிவு
➤ நேரு செய்த தவறுக்கு மோடி பொறுப்பேற்க முடியாது – அமைச்சர் ஜெய்சங்கர்
➤ கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவுக்கு ஜாமின்
➤வாரணாசியில் பிரதமர் மோடி வாகன பேரணி
➤ சசிகுமாரின் கருடன் திரைப்படம் மே.31இல் ரிலீஸ்
➤ நடப்பு ஐபிஎல்லில் இருந்து விலகினார் பட்லர்

News May 14, 2024

காஷ்மீர் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி

image

ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் முன்பை விட சிறப்பாக வாக்களித்து ஊக்கம் அளித்ததற்காக அவர்களைப் பாராட்ட விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், மக்களின் ஊக்கம் மற்றும் திறன்களின் முழுமையான வெளிப்பாட்டைக் காண முடிந்ததாகக் கூறிய அவர், இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் நல்லது எனக் கூறியுள்ளார்.

News May 14, 2024

டி20 உலகக் கோப்பைக்காக கிளம்பியது இலங்கை

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 2ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், முதல் அணியாக இலங்கை அணி WCஇல் கலந்துகொள்வதற்காக நியூ யார்க் கிளம்பியுள்ளது. இந்த தகவலை ஐசிசி தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

News May 13, 2024

மனைவி சைந்தவியை பிரிந்த ஜி.வி.பிரகாஷ்

image

சைந்தவியும், நானும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம் என நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்களது 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாங்கள் இருவரும் சேர்ந்தே இந்த மாதிரியான ஒரு முடிவை எடுத்ததாகக் கூறிய அவர், இந்த கடினமான நேரத்தில் அனைவரது ஆதவும் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.

News May 13, 2024

பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியது. 63ஆவது லீக் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அங்கு கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றைய லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

News May 13, 2024

பழங்கள் நல்லதா? ஜுஸ் நல்லதா?

image

சிலருக்கு பழங்களை சாப்பிடுவது நல்லதா அல்லது பழங்களை ஜுஸ் செய்து குடிப்பது நல்லதா என சந்தேகம் இருக்கும். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜுஸை காட்டிலும் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது என தெரிய வந்துள்ளது. பழங்களில் இருப்பது போல பழ ஜுஸிலும் விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கும். ஆனால் பழங்களில் இருக்கும் பைபர் சத்தானது, அதை ஜுஸ் செய்து சாப்பிடுவதால் கிடைக்காது என அந்த ஆய்வு கூறுகிறது.

News May 13, 2024

அதிர்ஷ்டத்தால் பண மழை கொட்டும்

image

அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். அந்த வகையில் சிம்மம், தனுசு, கும்பம், மீன ராசியினருக்கு பணம் கொட்டப் போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் யோகம், சிக்கல் இல்லாத பண வரவு போன்ற பல சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.

News May 13, 2024

மழை காரணமாக போட்டி ரத்து

image

அகமதாபாத்தில் இன்று நடைபெறவிருந்த குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து KKR 19 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திலும், GT 11 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மழை காரணமாக ரத்து செய்யப்படும் முதல் போட்டி இதுவாகும்.

News May 13, 2024

மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஷாகின் அப்துல்லா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி, மத அடிப்படையில் மோடி பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையமே சட்டத்துக்குட்பட்டு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமென கூறி தள்ளுபடி செய்தது.

News May 13, 2024

பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி

image

Department of School Education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒருமுறை தகவல் அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!