India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
FLiRT என்ற புதிய வகை கொரோனா இந்தியாவில் இதுவரை 91 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், இருமல், தலை மற்றும் உடல் வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். அதேபோல், சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். எனவே, மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பரவிவரும் FLiRT வகை கொரோனா வைரஸ் குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் ஆய்வாளர்களிடம் இல்லை. ஆனால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மீறி உடலினை தாக்கும் திறன் கொண்டவை என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களில் 1 சதவீதத்தினருக்கு மட்டுமே FLiRT வகை தொற்று உள்ளதால், இதன் வீரியத் தன்மை குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
FLiRT என்று சொல்லப்படக் கூடிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் அதிகம் பரவி வருகிறது. ஓமிக்ரான் வைரசின் துணை வகையான இந்த FLiRT, ஜனவரி மாதம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தானே, புனே, நாசிக் என பல நகரங்களில் 91 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை பதிவாகியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பரவி வருகிறது.
நாடு முழுவதும் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் அதற்கான மை, மைசூரு நகரில் இருந்துதான் அனுப்பி வைக்கப்படுகிறது. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக இந்த மை பயன்படுத்தப்பட்டது. மைசூருவில் உள்ள ‘மைசூரு பெயிண்ட்ஸ் & வார்னிஷ் லிமிடெட்’ கம்பெனிக்கு இந்த மை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. அன்று முதல் அதே நிறுவனம்தான் தேர்தலுக்கான மையினை தயாரித்து வருகிறது.
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உயிரிழந்த அவரது உடல், சொந்த ஊரான சித்தமல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தினர். அதன்பின், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்: ▶தனுஷ்-ஐஸ்வர்யா, ▶சமந்தா-நாக சைதன்யா, ▶அமலா பால் -ஏ.எல்.விஜய், ▶செல்வராகவன்-சோனியா அகர்வால், ▶விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ், ▶டி.இமான்-மோனிகா, ▶பிரபுதேவா-ராம்லாத்
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, வரலாற்று சாதனை படைத்துள்ளார். சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் காலிறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர், உலக தரவரிசையில் 24ஆம் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை எந்தவொரு இந்திய வீராங்கனையும் இந்த சாதனையை செய்ததில்லை.
தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு ₹14,000 ரொக்கம், ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி கிடைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மகப்பேறு நிதியுதவி விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினர்.
கொல்கத்தா வீரர் ஃபில் சால்ட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்குவதற்காக வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென, இங்கி., கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அதனால், நேற்று ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ரீஸ் டோப்லி ஆகியோர் நாடு திரும்பிய நிலையில், இன்று ஃபில் சால்ட்டும் நாடு திரும்பினார். இதனால், கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இன்று ஆஜரானார். எனினும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.