News May 14, 2024
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஃபில் சால்ட்

கொல்கத்தா வீரர் ஃபில் சால்ட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்குவதற்காக வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென, இங்கி., கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அதனால், நேற்று ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ரீஸ் டோப்லி ஆகியோர் நாடு திரும்பிய நிலையில், இன்று ஃபில் சால்ட்டும் நாடு திரும்பினார். இதனால், கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல: H.ராஜா

பிஹாரில் லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்பட்டது போல், TN-ல் கருணாநிதி குடும்பம் எறியப்பட வேண்டும் என H.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றால், NDA எப்போதும் வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளார். திமுக அமைச்சர்களை மக்கள் தெருவில் நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 15, 2025
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க EPS நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், திமுக சாத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஷ்கோடி, மதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் N.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.
News December 15, 2025
கோயில் குளங்களில் காசு வீசுவது மூட நம்பிக்கையா?

முந்தைய காலங்களில் நாணயங்கள் செம்பினால் செய்யப்பட்டன. செம்பு கிருமிநாசினி தன்மை கொண்டது என்பதால் நீரிலுள்ள கெட்ட நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்தியது. அதன் காரணமாக, கோயில் குளங்களை தூய்மையாக வைத்திருக்க செம்பு நாணயங்களை நீரில் வீசினர். காலப்போக்கில் நாணயங்கள் செம்பிலிருந்து பிற உலோகங்களுக்கு மாறினாலும், இப்பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த அறிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.


