News May 14, 2024
இபிஎஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இன்று ஆஜரானார். எனினும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News December 11, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
சென்னை: ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக வரும் 15 முதல் பிப்.3ம் தேதி வரை சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் டிச.15 முதல் பிப்.2 வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். அதேபோல், எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் டிச.16 முதல் பிப்.3 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
சென்னை: ரயில் சேவையில் மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக வரும் 15 முதல் பிப்.3ம் தேதி வரை சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் டிச.15 முதல் பிப்.2 வரை தாம்பரம் வரையே இயக்கப்படும். அதேபோல், எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் டிச.16 முதல் பிப்.3 வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


