India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனக்கு எதிராக எத்தனை சதிகள் நடந்தாலும் பயமில்லை என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, விசாகப்பட்டினம் மாவட்டம் பெடிபாலத்தில் பிரசாரம் செய்த அவர், 25 எம்பி தொகுதிகள் மற்றும் 175 எம்எல்ஏ தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றார். ஒரு இடத்தில் கூடத் தோற்கக் கூடாது எனக் கூறிய அவர், தனக்கு மேலும் கீழும் கடவுள் துணை இருப்பதாகத் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலில், சித்ரா பெளர்ணமியை ஒட்டித் தேரோட்டம் நடைபெற்றது. “சாரங்கா சாரங்கா” என முழக்கமிட்ட பக்தர்கள் வடத்தைப் பிடித்துத் தேரை இழுத்துச் சென்றனர். தெற்கு வீதியில் சென்றபோது அங்கிருந்த சாலையில் இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் சிக்கிக் கொண்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இயந்திரங்களின் உதவியுடன் தேர் மீட்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் KL ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் CSK அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 7 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன. இதில் CSK 4, LSG 5 ஆவது இடங்களில் உள்ளன. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
நிலவின் முதல் விரிவான வரைபடத்தைச் சீனா வெளியிட்டுள்ளது. சீன மற்றும் ஆங்கில மொழிகளில் கிடைக்கும் இந்த வரைபடங்கள், நிலவின் ஆய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவின் வரைபடங்கள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக மாறாமல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், தற்போதைய அறிவியல் தேவைகளுக்கு ஏற்ப அப்படம் இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
கோயில் தேர் திருவிழாக்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் எனப் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு பகுதிகளில் சித்திரைத் திருவிழா நடந்து வரும் நிலையில், சில இடங்களில் மின் கம்பிகள் மற்றும் சாலைப் பள்ளத்தில் தேர் சிக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கத் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தைவான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 247 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் 6.3 ரிக்டர் அளவிலும் ஒருமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 நாள்களில் 1,095 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 3இல் ஏற்பட்ட நிலநடுக்கமே, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசரக்கால நிதி வேண்டும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். நிலையற்ற வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் அவசரத் தேவை ஏற்படலாம். அப்படி ஏற்படும்போது, உடனடியாகப் பணத்தைத் திரட்டுவது கடினம். அந்த நேரத்தில் அவசரக்கால நிதி பயனுள்ளதாக இருக்கும். மாதத் தேவையில் 6 மடங்கை அவசர நிதியாகச் சேர்த்துவைக்க வேண்டும் என்று பொருளியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நாடு முழுமைக்குமான தலைவர் ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கேரளத்தின் வயநாட்டில் பிரசாரம் செய்த அவர், வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். நமது நாட்டின் ஆன்மா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் ரூ.13,000 கோடியை நன்கொடையாகப் பெற்ற பாஜக, காங்கிரசின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ₹50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். பணப் பிரச்னையால் தடைபட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணி நேற்றுப் பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து முன்னணி நடிகர்கள் பலரும், நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
மூச்சுத் திணறல், இதயப் பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வர வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் சிவ பக்தர்கள் அதிக அளவில் செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை வெயில் தாங்காமல் பக்தர்கள் சிலர் உயிரிழக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்க, முதியோர், உடல்நலப் பாதிப்பு உள்ளவர்கள், கோடை வெயில் முடியும் வரை மலையேற வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.