News May 15, 2024
இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா?

நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே அக்கட்டிடமாகும். 12 மாடிகளுடன் முதலில் கட்டப்பட்ட அக்கட்டிடம், நாட்டின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை 1961 வரை வைத்திருந்தது.
Similar News
News December 15, 2025
இன்று முதல் அதிமுக விருப்ப மனு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. முதல் நாளான இன்று மட்டும் பிற்பகல் 12 மணிக்கு விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம். மற்ற நாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு படிவங்களை அதிமுக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று EPS அறிவித்துள்ளார்.
News December 15, 2025
உச்சம் தொட்ட முட்டை விலை

முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ₹6.25-ஆக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை அதிகரித்ததால் , சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில்லறை வணிகத்தில் ஒரு முட்டை ₹7 வரை விற்பனை செய்யப்படுகிறது.
News December 15, 2025
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார்?

<<18561882>>ஆஸ்திரேலிய<<>> துப்பாக்கிச்சூட்டில், 10 வயது சிறுமி உள்பட பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பழக்கடை வியாபாரியான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் என தெரிய வந்துள்ளது. இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் போதே போலீஸார் சுட்டதில் சஜித் உயிரிழந்ததாக கூறினர். நவீத் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


