News May 15, 2024

IPL: 2ஆவது இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

image

PBKS-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அசாமில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப், ஐபில் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறியது. 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தாலும், 2ஆவது இடமா, 3ஆவது இடமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தை பிடிக்குமா ராஜஸ்தான்?

News May 15, 2024

இருவேறு விபத்தில் 9 பேர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல, மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது மனைவியும் மகன்களும் உயிரிழந்தனர்.

News May 15, 2024

விபத்துகளை தடுப்பது எப்படி?

image

நேற்றிரவு நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இரவு நேரங்களில் தூக்கம் வந்தால் அதற்கான இடத்தில் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம், நெடுஞ்சாலை விதிகளில் உள்ள வேகக் கட்டுப்பாட்டை பின்பற்றலாம், வாகனத்துக்கு முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களுடன் போதுமான இடைவெளியை பின்பற்றலாம்., இவற்றை செய்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.

News May 15, 2024

பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்கும் மோடி

image

பிரதமர் மோடி மும்பையில் இன்று பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு இந்த வாகன பேரணி நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா உள்ள 6 தொகுதிகளில், வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

News May 15, 2024

நடிகர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள்

image

நடிகர்கள் விவகாரத்து செய்வது வருத்தமாக இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து நடிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ரசிகர்களுக்கு நடிகர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, தனுஷ் & ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ் & சைந்தவி உள்ளிட்டோர் அடுத்தடுத்து திருமண வாழ்வில் இருந்து விலகியுள்ளனர்.

News May 15, 2024

ராகு தோஷம் இருப்பவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்

image

திருமணஞ்சேரி என்னும் திருத்தலம் திருமண தடை நீங்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

News May 15, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தென் மாநிலங்களில் பாஜக அதிக இடத்தில் வெல்லும் – அமித் ஷா
➤ காங்கிரஸ் உருவாக்கியதை பாஜக அழித்து வருகிறது – பிரியங்கா
➤ பாஜக 400 இடங்களில் வெல்லும் – அன்புமணி
➤டெல்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு
➤இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
➤ டெல்லிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி

News May 15, 2024

பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான் அணி?

image

ஐபிஎல் தொடரில் இன்றைய 65ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. ராஜஸ்தான் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வென்றால் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்த ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப், தொடரில் இருந்து ஏற்கனவே எலிமினேட் ஆகியுள்ளது.

News May 15, 2024

சுசித்ரா குற்றச்சாட்டுக்கு முன்னாள் கணவர் விளக்கம்

image

நடிகர் கார்த்திக் குமார் மீது அவரது முன்னாள் மனைவி சுசித்ரா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இதை திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கார்த்திக் குமார், தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை, அது பெருமையான விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

இந்தியா அரையிறுதிக்கு செல்லும்

image

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ஆஸ்திரேலிய அணியை சந்திப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றார். இந்த தொடர் அக்டோபர் 3 முதல் 20ஆம் தேதி வரை வங்க தேசத்தில் நடைபெற உள்ளன.

error: Content is protected !!