News May 15, 2024

IPL: 2ஆவது இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

image

PBKS-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அசாமில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப், ஐபில் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறியது. 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தாலும், 2ஆவது இடமா, 3ஆவது இடமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தை பிடிக்குமா ராஜஸ்தான்?

Similar News

News December 14, 2025

சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

image

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.

News December 14, 2025

நான் எந்த தவறையும் செய்ய மாட்டேன்: கே.என்.நேரு

image

அமைச்சர் கே.என்.நேரு ₹1020 கோடி ஊழல் செய்ததாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் பெரும் நெருப்பாக பற்றி எரிகிறது. இந்நிலையில், நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நேருவை குறிவைத்து அடித்தால், இந்த பகுதியில் (திருச்சி) திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு பாஜகவினர் வேலை செய்கிறார்கள் எனக் கூறிய அவர், உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எந்தத் தவறையும் செய்யமாட்டேன் என்றார்.

News December 14, 2025

கர்நாடக காங்., பஞ்சாயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளியா?

image

கர்நாடகா CM பதவிக்கான பஞ்சாயத்தில் ஏற்கெனவே தங்களுக்குள் <<18420626>>எந்த பிரச்னையும் இல்லை<<>> என CM சித்தராமையா, DCM டிகே சிவகுமார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் சோனியா காந்தியை இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் மூலம் கர்நாடக காங்.,-ல் நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!