India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேங்க் ஆப் பரோடாவில் 500 பியூன் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 24 காலியிடங்கள் உள்ளன. 10வது தேர்ச்சி பெற்று, 18- 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹19500 – ₹37815 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அபரேஷன் சிந்தூர்-ன் இலக்கு பாக்., ராணுவம் இல்லை என தெளிவுபடுத்தி இருந்தோம். இருப்பினும் பாகிஸ்தான், ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 5 குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதற்றம் அதிகரிக்காத வகையில், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
POSDEC (Point of Sale Declining Charges) என்ற ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ATM-ல் எந்த பரிவர்த்தனையும் நடக்காமல், கார்டை மெஷினில் போட்டு எடுத்தால், ₹28.75 பிடித்தம் செய்யப்படும். அதாவது, ATM-க்கு போய் தப்பான PIN-ஐ போட்டாலோ, அக்கவுண்டில் பணம் இல்லாத போது யூஸ் பண்ணாலோ, இந்த POSDEC கட்டணம் வசூலிக்கப்படும். ICICI ATM கார்டை பிற வங்கியில் பயன்படுத்தும் போது மட்டுமே இந்த பிடித்தம் செய்யப்படுகிறது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வருகிற 15-ம் தேதிக்கு முன்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதையடுத்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அந்தத் தேர்வு முடிவு 15-ம் தேதி (அ) அதற்கு முன்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்ன ரெடியா?
10 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோட்டில் இடி, மின்னலுடன் மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. தேனி, பெரம்பலூர், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. என்ன உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தார், ரஜவுரி பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, மார்ட்டர் மற்றும் ஹெவி ஆர்ட்டிலரி பீரங்கிகளை கொண்டு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது முக்கிய பயங்கரவாதி அப்துல் ராப் அசார் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1999-ல் இந்திய பயணிகள் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் அப்துல் ராப். இதேபோல், இந்தியாவின் பல இடங்களில் நடந்தத் தாக்குதல்களிலும் அவருக்கு தொடர்புண்டு. இந்நிலையில், அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ரேடார் அமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.
இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக நமது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், சண்டிகர், கபூர்தலா, லூதியானா உள்ளிட்ட 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. ஆனால், அவை அனைத்து இந்திய வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை ஈடுபட்டபோது இருதரப்புக்கும் நேற்று துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண் நக்சலைட்டுகள் ஆவர். இதுதவிர ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.