India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தவெக உடன் TN காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நம்பி திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளிவர வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த தகவல் உண்மை இல்லை என கூறிய அவர், காங்கிரஸில் இருக்கும் சிலர் சொல்வது கட்டுக்கதை என்றார். மேலும், TN-ல் திமுகவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்., செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $9 உயர்ந்து, $4,141-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.25) மட்டும் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ₹93,760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $9 உயர்ந்து, $4,141-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.25) மட்டும் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ₹93,760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த EWS பிரிவைச் சேர்ந்த 140 மாணவர்கள் ₹25 லட்சம் – ₹1 கோடி வரை செலுத்தி படிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது EWS இடஒதுக்கீட்டின் நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பும்படி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். EWS இடஒதுக்கீட்டின் கீழ் PG நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், மார்க் குறைந்தபோது NRI ஒதுக்கீட்டின் கீழ் படிப்பில் சேருகின்றனர்.

2-வது டெஸ்டின் கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்களை அடித்தாக வேண்டும். இதுகுறித்து 4-ம் நாள் ஆட்ட நேரத்திற்கு பிறகு பேசிய ஜடேஜா, இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்றிருந்தால், நல்ல நிலையில் இருந்திருக்கலாம் என்றார். மேலும், கடைசி நாளின் முதல் செஷனில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால், அது பவுலர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் என்றும், அதை சாதகமாக மாற்றி வெற்றி பெறலாம் எனவும் கூறினார்.

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில் பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில் பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.

இன்று MLA பதவி ராஜினாமா, நாளை தவெகவில் இணைப்பு என்ற தகவலுக்கு மத்தியில், செங்கோட்டையன் சென்னை வந்துள்ளார். ஏர்போர்ட்டில் தவெகவில் இணைவது பற்றி கேட்டபோதும், அவர் மறுப்பு தெரிவிக்காமல் சென்றார். மேலும் , அவரது ஆதரவாளர்களில் பலரும் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால் நாளைய அரசியல் களம் பரபரப்புக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் சற்றுநேரத்தில் ( மதியத்திற்குள்) ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. அதேநேரம் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஜன.9-ல் பொங்கல் ரிலீஸாக களம் காணவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சைந்தவி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.