India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.

மக்களின் துல்லியமான லொகேஷனை (A-GPS) எப்போதும் On செய்து வைத்திருப்பதை ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, டவர் சிக்னல் படி தோராயமான லொகேஷனையே பெற முடிவதால், புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இது மக்களின் தனியுரிமையை பாதிக்கும் என ஆப்பிள், கூகுள், சாம்சங் நிறுவனங்கள் எதிர்க்கின்றன.

டிட்வா புயல் வெள்ளத்தால் இலங்கையில் இதுவரை 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பவுள்ளது. இதன்பொருட்டு, இலங்கைக்கு நிவாரண பொருள்களுடன் செல்லும் கப்பலை, நாளை சென்னை துறைமுகத்தில் CM ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கவுள்ளார்.

தொடர்ந்து 4 நாள்களாக சரிந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முதல் ஏற்றத்தை கண்டுள்ளன. RBI-ன் <<18475076>>ரெப்போ வட்டி குறைப்பு<<>>, இன்றைய ஏற்றத்திற்கு வலு சேர்த்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்து, 85,712 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 26,186 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

அரையாண்டு தேர்வுகள் டிச.10- டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு ஆப்பிள் சைடர் வினிகர் தீர்வளிக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின், வினிகரை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு முடியை குளிர்ந்த நீரில் அலசி வந்தால் பொடுகு, அதனால் ஏற்படும் முடி உதிர்வு குறையும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.

இண்டிகோ ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை – பெங்களூரு ₹3,129 என இருந்த டிக்கெட் விலை ₹20,599, ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை – திருச்சி ₹3,129 to ₹14,961, சென்னை – திருவனந்தபுரம் ₹6,805 to ₹34,403, சென்னை – மும்பை ₹5,980 to ₹42,448, சென்னை – டெல்லி ₹7,746 to ₹32,782 வரை உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூடங்குளத்தில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை உருவாக்க இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அங்குள்ள 6 அணு உலைகளில் 3 உலைகள் இந்தியாவின் எரிசக்தி வலையமைப்புடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, மலிவான, சுத்தமான மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறினார்.

திருப்பரங்குன்றத்தில் மோசடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக திமுக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் 161 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.