India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கோட்டையனைத் தொடர்ந்து OPS-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக, அவரும் தவெகவில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரோனை அதிகப்படுத்துவதுடன், ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் NDA கூட்டணிக்கு பலம் அதிகரிக்கும் என பாஜக தலைமை நினைத்தது. இதனால் 0PS, டிடிவி தினகரன் போன்றவர்களை இணைக்க பாஜக முயற்சி எடுத்த போது, EPS பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் சரியும் என கணிக்கப்படுகிறது. இது EPS மீது பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

‘டிட்வா’ புயல் எதிரொலியாக நாளை (நவ.28) திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்லில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலையில் மழை அளவை பொறுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம். இல்லையெனில், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

சீமானின் தூண்டுதலின் பேரில் தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் நாதகவினர் அவதூறு கருத்து பதிவிட்டு வருவதாக டிஐஜி வருண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி சீமான் மதுரை HC-ல் மனு தாக்கல் செய்தார். ஏற்கெனவே சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது நீதிபதி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

*கோபிசந்த் மாலினேனி இயக்கும் பாலைய்யாவின் 111-வது படம் பூஜையுடன் தொடங்கியது. *சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸுக்கும், சாட்டிலைட் உரிமம் ஜீ5-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *அனிருத் குரலில் LIK படத்தின் 2-வது பாடலான ‘Pattuma’ வெளியாகியுள்ளது. *நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2026-ம் ஆண்டுக்குள் அக்னிவீர் பணியிடங்களை ஆண்டுக்கு 1 லட்சமாக அதிகரிப்பது குறித்து ராணுவம் பரிசீலித்து வருகிறது. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்டு, 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 40,000 வீரர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கை 60,000 – 65,000 வரை உள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிச.5-ம் தேதி (அடுத்த வெள்ளி) அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் கல்வித் தரம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது, மாணவர்களுக்கான அரசுத் திட்டங்களை எடுத்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்படும்.

முதலைகள், டைனோசர்களின் காலத்திலிருந்து பூமியில் வாழும் பழமையான உயிரினங்களில் ஒன்று. முதலைகள் பொதுவாக நன்னீர், உப்புநீர்(கடல்), சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலைகளில் வாழ்கின்றன. அவை சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், முதலைகள் எந்த நாடுகளில் அதிகளவில் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

தேர்தலில் நின்று விஜய் தனது செல்வாக்கையும், சக்தியையும் நிரூபிக்கட்டும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் DMK Vs TVK என நகர்கிறதா என்ற கேள்விக்கு, விஜய் தற்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார் என்றும், அவர் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை எனவும் விமர்சித்துள்ளார். எடுத்தவுடனேயே Long Jump, High Jump என உலகத்தை தாண்டுவேன் என்றால் அது எப்படி நடக்கும் என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.