India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடு முழுவதும் கடந்த மாதம் 31,49,846 பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக FADA தெரிவித்துள்ளது. இது வரலாறு காணாத உச்சமாகும். 1,29,517 ஆட்டோக்கள், 73,577 டிராக்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம். இது, கடந்த செப். மாதத்துடன் ஒப்பிடும்போது 120% அதிகமாகும். GST குறைப்பு, பண்டிகை கால விற்பனையே காரணம் என டீலர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ சாலைகளில் முறையாக ரூல்ஸை கடைப்பிடித்து வண்டியை ஓட்டுங்க.

*PM மோடி அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி பூடான் பயணம். *வடகிழக்கு மாநிலங்களின் கல்விக்காக ₹21,000 கோடி முதலீடு செய்ததாக FM தகவல். *காசி தமிழ் சங்கத்தின் 4-வது நிகழ்வு டிச.2 முதல் 15-ம் தேதி வரை நடக்கவுள்ளது. *பிஹாரில் சாலையோரம் VVPAT ஒப்புகை சீட்டு இருந்த விவகாரத்தில் உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம். *இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்.

*ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் முதல் இன்னிங்ஸில் TN 182 ரன்களுக்கு ஆல் அவுட். *தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ODI-ல் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி. *2-வது பயிற்சி டெஸ்டில் SA A-வுக்கு 417 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா A. *உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிளில் இளவேனில் வெண்கலம் வென்றார். *50மீ பிஸ்டலில் ரவீந்தர் சிங்கிற்கு தங்கம் கிடைத்தது.

விஜய்யின் கூட்டணி முடிவால் தவெக 2-ம் கட்ட நிர்வாகிகள் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் துயருக்கு பிறகு கூட்டணி என அவர்கள் விரும்பியதாகவும், ஆனால் மூத்த நிர்வாகிகள் விஜய்யின் மனதை மாற்றிவிட்டதாகவும் பேசப்படுகிறது. தனித்து நின்றால் DMK-வுக்கு அது சாதகமாகும் என கருதி, தேர்தல் சீட் கேட்க கூட தயங்குகின்றனராம். கூட்டணி பற்றிய அவர்களது மனமாற்றத்தால் தவெக தலைமை குழப்பத்தில் உள்ளதாம்.

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என EPS பேசியுள்ளார். காற்றை எப்படி தடை போட முடியாதோ, அது போல தான் அதிமுகவை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கூடவே இருந்த பல எட்டப்பர்களின், வீழ்த்தும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து அதிமுக தலைநிமிர்ந்து நிற்பதாக EPS தெரிவித்தார். மேலும், இந்தியாவில் எந்த கட்சியும் அதிமுகவை போல கடும் சோதனைகளை சந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

2019-ல் நிலவை ஆராய்ச்சி செய்திட ஏவப்பட்ட சந்திராயன்-2, இன்றளவிலும் அதன் பணியை சிறப்பாக செய்கிறது. அகமதாபாத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன்-2 அனுப்பும் தகவல்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக நிலவில் L பேண்ட் ரேடார் மேப்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை வைத்து நிலவில் தண்ணீர், ஐஸ்-ன் தடங்களை கண்டறிய வாய்ப்புள்ளது.

EC-ஐ பயன்படுத்தி திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த நடக்கும் முயற்சி தான் SIR என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவசர அவசரமாக SIR அமல்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பிய CM, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர் இடம்பெறாமல் இருப்பதை திமுகவினர் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

டிக்டாக்-ல் பிரபலமாகி திரையுலகில் தடம்பதித்த புதுவை பெண் மிர்னாலினி ரவி, தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. அவை தங்களது இதயக்கூட்டில் இடம்பிடித்துவிட்டதாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள், அவரை மீண்டும் கோலிவுட் பக்கம் அழைத்து வாருங்கள் என இயக்குநர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்..

இரைப்பை பாதையில் காற்றால் நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சம அளவில் எடுத்து இடிக்கவும். அதன் பிறகு அரை டீஸ்பூன் பொடியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வாருங்கள். இதனால் இரைப்பை பாதையில் உள்ள காற்று குறைந்து வயிற்று உப்புசம் பிரச்னை தீர்க்கப்படும்.

ரயில்வேயில் 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியாளர், டெப்போ கண்காணிப்பாளர் பணிகளுக்கு துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணபிக்கலாம். உலோகவியல் உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பு அவசியம். 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் நவ.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முதல் நிலை, 2-ம் நிலை என கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும்.
Sorry, no posts matched your criteria.