India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கல்வியால் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்க கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிப்பதாக கூறிய அவர், இதுதான் அம்பேத்கரின் வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையே ஒரு பாடம் எனவும், அந்த பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய்யின் மெளனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில், ‘ஜோசப் விஜய்’ என்ற அடையாளத்தை வைத்து ஏற்கெனவே பாஜக, விஜய்யை விமர்சிப்பதால், இரு மதங்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் ஏதும் பேச வேண்டாம் என விஜய் எண்ணுவதாக தவெகவினர் கூறுகின்றனர். கோர்ட்டில் இவ்வழக்கு செல்வதை பொறுத்து, விஜய் விரைவில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது பிரபலமான வீரர்கள் என்றால் கோலியும், ரோஹித்தும்தான். அதுவும் இவர்கள் ஓய்வுபெறுவார்கள் என பேசப்பட்டதால் அடிக்கடி ஹெட்லைன்சில் இடம்பெறுகின்றனர். ஆனாலும், கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் இவர்கள் இடம்பெறவில்லை. மாறாக IPL-ல் அசத்திய 14 வயது கிரிக்கெட்டர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர்தான் Most-Searched Personalities in 2025 லிஸ்டில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் வெள்ளி ₹4000 குறைந்தது. ஆனால், இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹3 உயர்ந்து ₹199-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்ந்து கொண்டே வருவதால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ’சிக்மா’ படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாஜகவில் நயினார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் கொளுந்துவிட்டு எரிவதாக பேசப்படுகிறது. அண்ணாமலை தரப்பை பேஸ்மெண்ட்டோடு தகர்க்கும் பிளானில் இருக்கும் நயினார், தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவருகிறாராம். அத்துடன் வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கிடைக்கக்கூடாது என நயினார் தீர்க்கமாக இருப்பதாகவும், இதுகுறித்து டெல்லி பாஜகவிடம் அவர் பேசிவருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ரயிலில் Lower Berth இருந்தால், அது தானாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், முன்பதிவில் கேட்காவிட்டாலும், Quota அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

கல்லீரலை தாக்கும் Hepatitis B வைரஸுக்கான தடுப்பூசி, WHO பரிந்துரைப்படி இந்தியா உள்பட பல நாடுகளிலும், குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போடப்படுகிறது. ஆனால், USA-வில் தாய்க்கு தொற்று இருந்தால் மட்டுமே தடுப்பூசி அவசியம். இல்லையெனில் பின்னர் போட்டுக்கொள்ளலாம் என விதி மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் நோய் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பாஜக தன்னை தவெகவுக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் தலைவருடைய கொள்கைதான் அனைத்துத் தொண்டனுக்கும். அது தனக்கும் பொருந்தும் எனக் கூறிய அவர், அதிமுக – தவெக கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என உறுதிபட அறிவித்தார். மேலும், மாபெரும் மக்கள் சக்தியுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் அமர்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.