India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக அமைந்ததாக கருணாஸ் கூறியுள்ளார். அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது என்றும், புதிய கட்சிகள் பல வந்துள்ளதால் எத்தனை தொகுதி என்பதை விட, ஸ்டாலினை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம் எனவும் தெரிவித்தார். ஸ்டாலின் சொன்னால் 234 தொகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் நிற்பேன் எனவும் கூறியுள்ளார்.

தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸுக்கு தகுதியும் இல்லை, தைரியமும் இல்லை என குஷ்பு விமர்சித்துள்ளார். ஒரே சமயத்தில் திமுக மற்றும் விஜய்யிடம் காங்கிரஸ் பேரம் பேசிக்கொண்டு இருப்பதாகவும், யாரிடம் இருந்து அதிக லாபம் கிடைக்கிறதோ அந்த பக்கம் சென்றுவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு தரமுடியாது என CM ஸ்டாலின் சொன்ன பிறகும், காங்கிரஸுக்கு ரோஷம் வாரவில்லை எனவும் சாடியுள்ளார்.

போரை தீர்மானிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க, அதன் கோர முகத்தை நேரடியாக சந்திப்பது என்னவோ அப்பாவி மக்கள்தான். 2025-ல் மட்டும் உலகளவில் நடந்த போர்களில் சுமார் 2,40,000 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த சோகம் இத்துடன் நின்றுவிடவில்லை. 2024-ல் மட்டும் சுமார் 47.3 கோடி குழந்தைகள் போரினால் வறுமை, உடல் & மனரீதியிலான பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். இப்போ சொல்லுங்க.. போர் அவசியமா?

சந்திரசூடேஸ்வரா் கோயில் விழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 சனிக்கிழமை அன்று வேலைநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, <<19256882>>குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை<<>> மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இணைந்ததன் மூலம், தன்னை முதல்வராக்கிய ஜெயலலிதாவின் முதுகில் OPS குத்திவிட்டார் என பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். சுயமரியாதை கொண்ட தமிழக மக்கள் OPS-ஐ மன்னிக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக – பாஜகவின் தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு, நாங்கள் ஒரு குடும்பமாக இருப்பதாகவும், தொகுதி பங்கீடு பற்றி பொதுவெளியில் பேசமுடியாது என்றும் பதிலளித்தார்.

<<19260381>>கோயில் பூசாரிகளின்<<>> நலனுக்காக 11 அறிவிப்புகளை CM ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, பூசாரிகளின் குழந்தைகளுக்கு முதுநிலை, இளநிலை படிப்புக்கு ஆண்டுக்கு மேலும் ₹2,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் பள்ளி படிப்புக்கான நிதி மேலும் ₹1,000 உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். கிராம கோயில் பூசாரிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பை ₹1.25 லட்சமாக உயர்த்தியும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரையில் நாளை PM மோடி பங்கேற்கும் <<19261306>>NDA <<>>கூட்டணி பொதுக்கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம் நீக்கப்பட்டுள்ளது. முகப்பு வாயிலில் பெரியார், அண்ணா படங்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பெரியாரின் படம் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுக பெரியார் படத்தை நீக்கியதாக விமர்சனம் எழுந்துள்ளது.

<<19262444>>தங்கத்தை<<>> தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று பெரியளவில் விலையேற்றத்தை சந்தித்துள்ளது. காலையில் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹20,000 அதிகரித்து, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹320-க்கும் 1 கிலோ ₹3.20 லட்சத்திற்கும் விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் வெள்ளி விலை ₹50,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் TTV இணைந்ததால் தென் & டெல்டா மாவட்டங்களில் சில தொகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என சபரீசன் டீம் திமுக தலைமையை எச்சரித்தது. இதையடுத்து தான் ’Operation SO’ (SASIKALA, OPS) உருவானது என திமுக தரப்பில் சொல்கிறார்கள். அதன்படி TTV-ன் அமமுக ஓட்டுகளை பிரிக்கவே, OPS திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளாராம். சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சிக்கும் திமுக தலைமை, மறைமுக ஆதரவை உறுதிசெய்துள்ளதாம்.

T20I WC தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறாது என பாக். Ex. வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார். இந்தியா வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வி அடைந்து வெளியேறும் என கூறிய அவர், தன்னுடைய கருத்தில் பின்வாங்கவில்லை என உறுதியாக கூறுகிறார். அதே நேரத்தில் பாக் அணி., இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க, இந்தியா அரையிறுதி முன்னேறுமா?
Sorry, no posts matched your criteria.