India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழுந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.

*உ.பி., பள்ளி ஒன்றில் கேஸ் லீக்கின் காரணமாக 16 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். *டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். *திரிபுராவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் பலியாகினர். *மும்பையில் காற்றுமாசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அதில் காற்று மாசுகள் படிந்துகொள்ளும். காலை வாக்கிங் செல்லும் அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிப்பை, N95 மாஸ்க் அணிவது, அதிக தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது உள்ளிட்டவைகள் மூலம் தவிர்க்க முடியும் எனவும் கூறிகின்றனர். SHARE IT

ஹர்திக் பாண்ட்யாவும், அவரது காதலி மஹிகா சர்மாவுக்கு நெருக்கமாக இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பலராலும் கவனிக்கப்பட்ட விஷயம், மஹிகா கையில் உள்ள வைர மோதரமே. இதை வைத்து பலரும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி வருகின்றனர். ஆனால் இருவரும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஹர்திக்கிற்கு கடந்த ஆண்டு அவரது மனைவியுடன் விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

*வெவ்வேறு கலாச்சாரங்களை இணைக்கும் பாலமாக புத்தகங்கள் உள்ளன. *வாழ்க்கையில் வெற்றிபெறுவதே கல்வியின் நோக்கம் என்று கருதுவது தவறு; வாழ்க்கையை வளமடையே செய்வதே கல்வியின் நோக்கம். * பொறுமையும், சகிப்புத் தன்மையுமே கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.* அறிவின் அடிப்படையில் மட்டுமே மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியமாகும்

* ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, திராட்சை, ப்ளம்ஸ் ஆகிய குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
*முந்திரி, பாதாம், வால்நட் ஆகிய வைட்டமின் பி நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாமாம்.
*அசைவ உணவுகள் பொருத்தவரையில் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் சிறந்ததாம்.

*50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் ‘SHOLAY’ படம் வெளியாகிறது. *’டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. * 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.