India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் புதிதாக 55,000 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி 1.08 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அதனை பரிசீலனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் நீடிப்பதாக புகார் எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

★2017-ல் காரில் கடத்தப்பட்டு நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக, 6 பேர் கைதாகினர் ★<<18502283>>நடிகர் திலீப்<<>> தூண்டுதலின் பேரில், இது நடந்ததாக போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவரும், அவரது நண்பர் 7 & 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர் ★சிறப்பு புலனாய்வுக் குழு சமர்பித்த ஆதாரங்களின் பேரில் சுனில், மார்டின் ஆண்டனி உள்பட 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது ★தண்டனை விவரம் 12-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் IT, தொழில்நுட்ப & Management பணிகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் உருவாக்கும் செயல்முறை மையங்களை Global Capability Center என்பார்கள். இதில், இந்தியாவில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள படத்தை வலது பக்கமாக Swipe செய்யவும்.

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை <

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து <<18502283>>நடிகர் திலீப்<<>> விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாததால், திலீப் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதே நேரம், நடிகையின் டிரைவர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் கல்யாண் சாட்டர்ஜி(81) காலமானார். 1968-ல் அபஞ்சன் படத்தில் அறிமுகமான இவர், கஹானி, சுகர் பேபி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த அவர், GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யஜித் ரேயின் பிரதித்வந்தி உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி பலமாக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூரில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த கூட்டணி எப்படி இருந்தாலும் சரி, வரும் தேர்தலில் NDA கூட்டணி நிச்சயமாக வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.