India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரியை நேரில் கேட்டு விட வேண்டும் என்ற ஆவல் தமிழக விஜய் ரசிகர்களிடமும் உள்ளது. இதனை கவனித்த டிராவல்ஸ் நிறுவனம், அதனை சூப்பர் பிஸினஸாக மாற்றியுள்ளது. தளபதி கச்சேரிக்கான ஃப்ரீ டிக்கெட்டுடன் 3 நாள் ட்ரிப்பாக மலேசியா கூட்டி செல்கின்றனர். இதற்கு ₹19,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விமான டிக்கெட்டுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. யாரெல்லாம் போறீங்க?

2022 அக்.13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் கைதான சதீஷூக்கு தூக்குதண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு <

2-வது டெஸ்டின், 2-வது இன்னிங்ஸில் SA டிக்ளேர் செய்ய ஏன் நீண்ட நேரம் எடுத்து கொண்டது என்ற கேள்விக்கு SA கோச்சின் பதில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சுக்ரி கொன்ராட் ‘We wanted them to really grovel’ என்ற வாக்கியத்தை உபயோகித்தார். இதில் Grovel என்றால் ஊர்ந்து சென்று அடிபணிவது என பொருள் பெறும். அதாவது அவர், இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம் கூறினார். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?

சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற PM-ஐ மிஸ் செய்கிறோம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். வி.பி.சிங் தன்மீது காட்டிய அன்பை நினைவுகூர்ந்த CM, சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக வி.பி.சிங் விளங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தெ.ஆ., அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வியடைந்ததால் கோச் பதவியில் இருந்து கம்பீர் நீக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் அதனை பிசிசிஐ தற்போது மறுத்துள்ளது. கம்பீரை நீக்கும் எண்ணம் தற்போது இல்லை எனவும், 2027 WC வரை அவரே கோச்சாக தொடர்வார் எனவும் BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியில் கம்பீர் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஏழை நாடல்ல, ஏழையாக்கப்பட்ட நாடு என்ற கூற்று, இது போன்ற சம்பவங்களின் மூலம் உறுதியாகிறது. மேலே உள்ள போட்டோவை பாருங்க.
ம.பி.யின் ஜுன்னார்தேவ் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமூகநல கட்டடம் இது. இந்த 15 தூணை கட்ட சுமார் ₹24 லட்சத்தை அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் செலவு செய்துள்ளனர். ஒரு மூட்டை சிமெண்டுக்கு ₹1.92 லட்சம் எனவும் கணக்கு எழுதி வைத்துள்ளனர். மக்களின் வரி பணம், இப்படிதான் வீணாகிறது!

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹180-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹9,000 அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பெரும் வெற்றிபெற்ற அனிமேஷன் படமான ‘மகாவதார் நரசிம்மா’ ஆஸ்கர் போட்டியில் களமிறங்கி, உலகளவில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ஆஸ்கரின் அனிமேஷன் பிரிவில் தகுதிபெற்ற 35 படங்களில் ஒன்றாக இது இடம்பெற்றுள்ளது. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் முதல் அனிமேஷ் படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. Zootopia 2, Demon Slayer: Infinity Castle உள்ளிட்ட சர்வதேச படங்களுடன் இது போட்டியிடுகிறது.

பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதால், இதுவரை கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. இதற்கிடையில், பாமகவின் அனைத்து அதிகாரங்களும் தனக்குதான் இருப்பதாக அன்புமணி கூறி வருகிறார். இந்நிலையில், அன்புமணிக்கு எதிராக அரசியல் களத்தில் குதித்துள்ள ஸ்ரீகாந்தி, பாமக பெயர், சின்னம் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனர் ராமதாஸிடம்தான் உள்ளது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.