India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனமழை முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுமட்டுமின்றி, மேலும் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்.

மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சில நடிகைகள், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர். பலரும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு மறைந்தனர். அவர்களில் சில மறக்கமுடியாத நடிகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களால் மறக்க முடியாத நடிகை யார்? SHARE

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக OPS தெரிவித்துள்ளார். செங்கோட்டையன், தினகரனுடன் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருவதாக கூறிய அவர், அதிமுகவில் பிரிந்தவர்களை இணைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். <<18363937>>தினகரன்- அண்ணாமலை<<>> சந்திப்பு நல்லதற்கே என்றும் அவர் கூறியுள்ளார்.

புயல் அலர்ட்டால், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதல்கட்டமாக தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை(நவ.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. SHARE IT.

தலைக்கு குளித்த பின் டவலால் முடியை கட்டுவது பெண்கள் வழக்கமாக செய்யும் ஒன்றுதான். ஆனால் டவலை இறுக்கமாக கட்டினால் முடி உடைவது, உதிர்வது போன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, ஈரத்தலையை டவலை வைத்து மென்மையாக துடையுங்கள். வேண்டுமென்றால் Cool Mode-ல் டிரையரை யூஸ் பண்ணலாம். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

<<18250479>>திருப்பதி<<>> ஏழுமலையான் கோயிலில் சுமார் 20 கோடி லட்டுகள், கலப்படம் செய்யப்பட்ட நெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த லட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான SIT விசாரணையில், ₹250 கோடி மதிப்பிலான சுமார் 68 லட்சம் கிலோ கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘மாலை நேரத்து மயக்கம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா கபி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ‘DC’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு, DC டைட்டில் டீசரிலேயே பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இவரது இன்ஸ்டா பதிவுகள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. சமீபத்தில், பதிவிட்ட போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் சம்பந்தியும், கட்சியின் மூத்த தலைவருமான சிந்து சண்முகம் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் மறைந்த செய்தியை அறிந்து வேதனையுற்றதாகவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பவானி நகரச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை சிந்து சண்முகம் வகித்திருக்கிறார். RIP

*பல ஆண்டுகளுக்கு பிறகு, தெலுங்கு படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல். *பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்குவதை விட, சொந்தமாக வெப்சீரிஸ், ஒரிஜினல்ஸை தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாம். *ரஜினி பிறந்தநாளில் ‘ஜெயிலர் 2’ கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படம் வரும் டிசம்பர் 12-ல் வெளியாக உள்ளதாக அறிவிப்பு.

கடல் நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவு பற்றாக்குறை போன்ற காலகட்டங்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வருடக்கணக்கில் இவை தூங்குகின்றனவாம். இதன் மூலம், அவை உணவில்லாமலும் நீண்ட நாள்கள் வாழ முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.