India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தைராய்டு பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதற்கு மருத்துவம் அவசியம் என்றாலும், சரியான உணவுகளை உட்கொள்வதும் பலனளிக்கலாம் என சொல்கிறார்கள். தைராய்டு பிரச்னை குணமாக கடல் பாசி, பச்சை பயிறு, முருங்கை கீரை, தயிர், மஞ்சள், பூசணி விதைகள், பிரேசில் நட்ஸ், முட்டை ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பலருக்கு உதவும், SHARE THIS.

புயல் எதிரொலியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புதிதாக திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது. அதில் கலந்து கொள்ள சென்ற PM மோடி இன்று நாடு திரும்புகிறார். இது குறித்து அவர் தனது X பதிவில், உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இதில் பல நாட்டு தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். 2 நாள்கள் நடைபெற்ற <<18364418>>ஜி20 மாநாட்டில்<<>> ஆக்கிரமிப்பு, பொருளாதரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வடமாவட்டங்களில் செல்வாக்கை காண்பிக்க, பிரிந்து நிற்கும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக – பாமக இடையே நல்ல நட்பு உள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, இனி அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்றும் கூட்டணியை சூசகமாக தெரிவித்துள்ளார். 2026 தேர்தல் களத்தில் அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

*Unified Member போர்ட்டலுக்குள் சென்று, உங்கள் UAN விவரங்களை உள்ளிடுங்கள்.
*Views ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
*அதில் service history-ஐ ஓபன் செய்து, அதில் தவறான member ID-ஐ கிளிக் செய்யுங்கள்.
*பின்னர் அதனை delink கொடுங்கள்.
*அதற்கான காரணத்தை உள்ளிட்டால், மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு நீக்கிவிடலாம்.
*உங்கள் நிறுவனம் தவறான ECR-ஐ பதிவுசெய்திருந்தால், error என மெசேஜ் வரும்.

வாழையடி வாழையாக வரும் துரோகத்தின் உச்சக்கட்டமே அதிமுக என்று அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். கருணாநிதிக்கு துரோகம் செய்தவர் MGR என்ற அவர், MGR-க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா என கூறினார். ஜெ.,க்கு சசிகலாவும், சசிகலாவுக்கு EPS-ம் துரோகம் செய்தனர் என்றும் அவர் தெரிவித்தார். தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் அதிமுகவினர், அவர்களது கட்சியை வளர்த்தெடுத்தவர்களை விட்டுவிடுகின்றனர் என்றார்.

கனமழை எச்சரிக்கையால் 5-வது மாவட்டமாக திருவாரூருக்கும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்காசி, நெல்லை ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான US-ன் முயற்சிகளுக்கு உக்ரைன் பூஜ்ஜிய நன்றியுணர்வை காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பா, தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டார். US, உக்ரைன், ஐரோப்பா நாடுகள், அமைதியை நிலைநாட்டுவதற்கான வரைவு திட்டம் பற்றி விவாதிக்கையில், டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.

திமுக ஆட்சியும், காலாவதியான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் 3 ஆண்டு பதவிக்காலமும் சமூகநீதியின் இருண்ட காலம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் கடந்த நவ.16 உடன் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரமாக புதிய ஆணையத்தை அமைக்காமல் தமிழக அரசு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் BC, MBC, Minority ஆகியோருக்கான நீதி கிடைக்காமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.

இன்னும் 2 நாள்களில் புயல் உருவாக உள்ளதால், டெல்டா & தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து அந்தந்த கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழை பெய்து வருவதால் மேலும் பல மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.