India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ONGC-ல் காலியாகவுள்ள 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18- 24. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, டிகிரி. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,200- ₹12,300 விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

பிஹாரை தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற பொய்யை ஆளும்கட்சி தொடர்ந்து கட்டமைத்து வருகின்றது. ஆனால், அந்த பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையை சொல்லாமல், யாரும் அரசியல் செய்ய முடியாது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்றார்.

வாரணாசி பட விழாவில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என ராஜமௌலி கூறியிருந்தார். இதனையடுத்து, அவரது பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனக்கு ராமரை பிடிக்காது, கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ராமர் பிடிக்காது என்றால் அவர் பெயரில் படங்கள் எடுத்து ஏன் பணம் சம்பாதிக்கிறார்கள் என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிஹாரில் பெண் MLA-க்கள் ஆதிக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 26 பெண்கள் வெற்றிபெற்ற நிலையில், தற்போது 29-ஆக உயர்ந்துள்ளது. இதில், 26 பேர் NDA கூட்டணியை சேர்ந்தவர்கள். கடந்த முறை குற்றப் பின்னணி கொண்ட MLA-க்களின் எண்ணிக்கை 163-ஆக இருந்த நிலையில், இது இந்த முறை 130-ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பட்டதாரிகள் எண்ணிக்கை 149-லிருந்து 147-ஆக குறைந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடர்புடைய ஆரியங்காவு, அச்சன்கோயில், பந்தளம், குளத்துப்புழை, குருவாயூர் உள்ளிட்ட 72 ஆன்மிக தலங்களை இணைக்கும் படியான சுற்றுலா திட்டத்தை KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபருக்கு ₹500 – ₹700 வரை மட்டுமே டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பத்தனம்திட்டா, பம்பை பஸ் ஸ்டாண்ட்களில் பெறலாம்.

வாரத்தின் முதல் நாளான இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹92,320-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹11,540-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை மொத்தம் ₹2,880 குறைந்துள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமரின் போனை இன்னும் டிரேஸ் செய்யமுடியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு முன் அவர் போனில் பேசியது தெரியவந்திருக்கிறது. அவர் பயன்படுத்திய 2 செல்போன்கள் கிடைத்தால், இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது யார், எங்கிருந்து நிதி வந்தது என பல தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிஹாரில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பாக NDA கூட்டணி MLA-க்கள், இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். மீண்டும் CM ஆக நிதிஷ்குமாரே தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. நவ.22-ல் தற்போதைய அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இன்று நிதிஷ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிப்பார். இதன் பிறகு, நவ.22-க்குள் நிதிஷ் CM ஆக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின் வீட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் அஜித், அரவிந்த்சாமி, லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, போலீசார் அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாதுகாப்புக்காக அஜித் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

SIR-க்கு எதிராக நேற்று தவெக நடத்திய போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கட்சிப் போராட்டங்களில் விஜய் நேரடியாக கலந்து கொண்டால் தான், அவரது தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். கொள்கை எதிரியாக தவெக அறிவித்துள்ள பாஜக தமிழகத்தில் நுழைவதற்கு, நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜய் ஆதரவளித்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.