India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எப்போதும் சாதத்தை அதிகமாகவும், காய்கறிகளை குறைவாகவும் சாப்பிடுறீங்களா? இந்த தவறை செய்வதால் ரத்தத்தில் குளுக்கோஸ் லெவல் அதிகரிக்கும். எனவே சாப்பாட்டை குறைத்து, காய்கறியை அதிகமாக எடுங்கள். அத்துடன், முதலில் நார்ச்சத்து(காய்கறி), புரதம்(கறி, முட்டை, பனீர்) சாப்பிடுங்கள். கடைசியாக கார்போஹைட்ரேட்(ரைஸ்) சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. SHARE THIS.

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சிவகங்கை, திருப்பத்தூரிலுள்ள திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் நாய் வாகனம் இன்றி காட்சி தருகிறார். சிவ பக்தனான இரண்யாட்சனின் மகன்கள் தேவர்களை துன்புறுத்த, சிவன் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அவர்களை வதம் செய்தார். அசுரர்கள் என்றாலும் இருவரும் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க இங்கு பூஜை செய்து, யோகபைரவராக காட்சி தருகிறார். யோக நிலையில் உள்ளதால் நாய் வாகனம் இல்லை.

*டிச.5-ம் தேதி ரிலீசாக இருந்த அனுபமாவின் ‘லாக்டவுன்’ மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது *ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு ‘ஓ சுகுமாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது *வைபவின் ‘The Hunter’ சீரிஸ் இன்று முதல் ஆஹா ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது *ரியோவின் ‘ராம் இன் லீலா’ படப்பிடிப்பை விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். *கல்கி 2′ படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதில் பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாக தகவல்

*மகளிர் ஜூனியர் WC ஹாக்கியில், இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி *ஆசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆஷிஸ் லிமாயே தங்கம் வென்றார் *அதேபோல, ஈவென்டிங் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது *ஜெருசலேம் மாஸ்டர்ஸ் செஸ்-ல் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டம் வென்றார். *ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி 4-வது இடத்திற்கு முன்னேற்றம்.

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். வட & டெல்டா மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை பொறுத்து அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம்.

அரசு முறைப் பயணமாக அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். புடினின் இந்த பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான <<18461190>>வர்த்தகம், பொருளாதாரம்<<>> குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதையடுத்து, டிச.5-ல் நடக்கும் 23-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் PM மோடி, புடின் பங்கேற்கின்றனர். முன்னதாக, PM மோடி புடினுக்கு சிறப்பு விருந்தளிக்கவுள்ளார். புடின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.