India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ரசிகர்களுக்கு இதுதொடர்பாக ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி, நாங்க சவாலுக்கும் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். அவர், “கடந்த 4 மாதங்களில் விளையாடியதை போல விளையாடினால், எந்த அணியையும் வெல்ல முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மேட்ச்சில் யார் ஜெயிப்பாங்க?
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்துக்கு ஒரு கும்பல் திட்டமிட்டு விண்ணப்பித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர், பழங்குடியினர் வாக்குகள் குறிவைத்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டுக்கு 100% ஆதாரம் இருப்பதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஒரு வாரத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்து பேசிய EPS, ‘கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அதிமுகவில் வழக்கம்’ என்று விளக்கமளித்தார். அப்போது, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கம் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய எழுப்பினர். அதற்கு, உட்கட்சி பிரச்னையை பொதுவெளியில் பேசமுடியாது என சூசகமாக பதிலளித்தார்.
டெல்லியில் அமித்ஷா வீட்டிலிருந்து வெளியே வந்தபோது கர்சீப்பை எடுத்து முகத்தை துடைக்கத்தான் செய்தேன்; மறைக்கவில்லை என்று இபிஎஸ் விளக்கமளித்துள்ளார். திட்டமிட்டு தன் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், இனிமேல் பாத்ரூம் போனால் கூட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டுதான் போக வேண்டிய அரசியல் சூழல் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பித்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயரை நீக்கும்படி சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு தெரியாமலேயே சிலர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். வாக்குத் திருட்டில் ஈடுபடுவோரை தேர்தல் ஆணையம் பாதுகாப்பதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று விமர்சிக்கும் விஜய்யின் கொள்கை என்ன என H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தனது கொள்கைகளை பற்றி விஜய் பேசவில்லை என சாடிய அவர், தேசிய கட்சியான பாஜகவை எதிர்க்கும் தவெக தேச விரோத கட்சியா என்றும் கேட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் குண்டு கல்யாணம் கிட்னி பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சிகிச்சைக்கு பண உதவி தேவை என செய்தி வெளியானது. இந்நிலையில், அவரின் மருத்துவ செலவை அதிமுகவே ஏற்கும் என்று EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர் தேர்தல் காலங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தகக்து.
அரசு சேவையை பெற அரசு அலுவலகங்களை நாடும்போது, அங்குள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா? எதற்கும் யோசிக்காமல் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நீங்கள் புகாரளிக்கலாம். இதுபோன்ற பிரச்னையில் நீங்கள் சிக்கினால் உடனடியாக 1064 / 1965 – க்கு அழைத்தோ அல்லது dvac@nic.in -க்கு மெயில் மூலமாகவோ புகாரளியுங்கள். புகாரளித்த நபர் யார் என்ற தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
அன்று முதல் இன்று வரை ஆதிக்கத்துக்கும், இந்தி திணிப்புக்கும் தமிழ்நாட்டில் நோ என்ட்ரிதான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொண்டர்கள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது எனக் கூறிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எனும் மாண்பை மறந்து EPS ஒருமையில் பேசுவதாக சாடினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் 2-வது நாளாக குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹141-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,41,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹2000, இன்று ₹1000 என 2 நாளில் வெள்ளி விலை ₹3000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையலாம் என்பதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.