India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.

தமிழக மக்களின் நலனுக்காக திருப்பரங்குன்றம் முருகனிடம் வேண்டிக்கொண்டதாக PM மோடி கூறியுள்ளார். இந்த தரிசனம் ஆன்மிக நிறைவை தந்தபோதும், மனம் வருத்தமடைந்தது என்று பேசிய அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக்கோரி தற்கொலை செய்துகொண்ட பூரணசந்திரனை நினைத்து வருந்தினேன் என கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் மனிதநேயமற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என EPS தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் பணி உள்பட பல திட்டங்களை DMK அரசு முடக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு TN-க்கு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் அவதூறு பரப்புவதாகவும், மத்தியில் காங்., ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது TN-க்கு என்ன செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

PM KISAN திட்டத்தின் 22-வது தவணை (₹2,000) எப்போது கிடைக்கும் என்பதே நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்பே (மார்ச் 4) பணம் வரவு வைக்கப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியானது. ஆனால், தொகையை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனினும், மார்ச்சில் ₹2,000 கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதற்குள் KYC அப்டேட் உள்ளிட்டவற்றை நிறைவு செய்யுங்கள் விவசாய பெருமக்களே!

சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் PM மோடி பங்கேற்று இருப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை NDA கூட்டத்தில் பேசிய அவர், MGR நடித்த ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை சுட்டிக்காட்டி, திமுகவின் இருண்ட ஆட்சியை மோடி தலைமையிலான NDA கூட்டணி வீழ்த்தும் என கூறியுள்ளார். PM மோடிக்கு EPS உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் துணை இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தீவிர தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்திலும் அமெரிக்காவின் தாக்குதலில் பல உலக தலைவர்களும் தளபதிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை காண வலதுபக்கம் Swipe செய்து பாருங்கள். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் கோல்டு மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய இரண்டே நாள்களில் தங்கம் விலை ₹7,000 அதிகரித்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹15,775-க்கும் 1 சவரன் ₹1,26,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியும் கடந்த 1 வாரத்தில் கிலோவுக்கு ₹35,000 அதிகரித்து, ₹3.25 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் நாளையும் பெரியளவில் மாற்றம் இருக்கும்.

மதுரை, கோவை மெட்ரோ திட்டத்தை நியாயமற்ற காரணத்தை சொல்லி மறுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 20 லட்சத்துக்கு குறைவான மக்கள்தொகை இருக்கும் ஆக்ரா, போபால், மீரட் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயிலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் மதுரைக்கு அனுமதி இல்லை; மதுரைக்கு வரும் PM மோடியிடம் மெட்ரோ ரயில் குறித்து EPS கேட்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.