India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

<<18987395>>அஜித் பவார்<<>> மரணத்திற்கு விமானியின் அலட்சியமே காரணம் என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்க குறைந்தபட்சம் 5,000 மீட்டர் பார்வைத்திறன் அவசியம்; ஆனால் 3,000 மீட்டர் மட்டுமே தெரிந்தபோதும் விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானி ‘அய்யோ.. அய்யோ..’ என அலறிய சத்தம் கருப்புப் பெட்டியில் பதிவாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் வரும் நாள்களில் ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்குவோம் என இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். ஈரானின் துணிச்சலான மக்கள் கொடுங்கோல் ஆட்சியின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான சூழலை இஸ்ரேல் உருவாக்கும் என கூறியுள்ளார். ஈரான் குடிமக்களே, இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்; இது ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் இம்மாதம் யுதி திருஷ்டி யோகம் உண்டாக இருப்பதால் 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன்படி, *மேஷம்: காதல் வாழ்க்கையில் சிக்கல் வரும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைப்பது கடினமாக இருக்கும். *துலாம்: நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்கும் (அ) விற்கும் முடிவுகள் தவறாக முடியலாம். *கும்பம்: உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள்.

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

மத்திய கிழக்கின் நிலைமைகள் குறித்து விவாதிக்க PM மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இன்று இரவு 10 மணிக்கு கூடுகிறது. இதில் ஈரான் – இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. 2 நாள் பயணமாக தமிழகம் வந்த PM மோடி இன்று இரவு டெல்லி திரும்புகிறார்.

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.

மதுரை பொதுக்கூட்டத்தில் DCM உதயநிதிக்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் யாரோ ஒருவர் தனக்கும் தனது தந்தைக்கும் பயமில்லை என பேசுவதாக கேள்விப்பட்டேன் என்ற அவர், ஜனநாயக நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்றார். மேலும், என்னிடத்தில் பயமில்லை என ஒருவர் கூறுவதை நான் என் மீதான விமர்சனமாக கருதவில்லை எனவும், மாறாக ஜனநாயகத்தை சரியாக பின்பற்றியதற்கான பாராட்டு என்றும் கூறியுள்ளார்.

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை விளையாடிய அதே அணியுடன் இந்தியா மீண்டும் களமிறங்குகிறது.
Sorry, no posts matched your criteria.