News October 26, 2025

வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.. தமிழக அரசு

image

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 26, 2025

SIR தமிழகத்தில் நடக்க கூடாது என்பதில் உறுதி: கனிமொழி

image

பிஹார் போன்ற பல மாநிலங்களில் SIR-ஐ பயன்படுத்தி லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக MP கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிஹார் தேர்தலில் நீதியும், ஜனநாயகமும் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

News October 26, 2025

BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

image

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களை மாமல்லபுரம் வரவழைத்து விஜய் நாளை ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இது கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் தவெக தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அக்கட்சியின் வழக்கறிஞர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பிற நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News October 26, 2025

வெளிநாட்டு கல்வி மோகம் குறைந்துவிட்டதா?

image

வெளிநாட்டுக் கல்விக்காக இந்திய மாணவர்கள் செலவிடும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவை கண்டுள்ளது. 2024 ஆகஸ்டில் ₹3,688 கோடியாக இருந்த தொகை 24% சரிந்து, 2025 ஆகஸ்டில் ₹2,800 கோடியாக குறைந்ததுள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு படிப்பின் மீதான மோகம் குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் கல்வியின் தரம் அதிகரித்திருப்பதை இதை காட்டுகிறது எனவும் RBI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!